Pages

Wednesday, October 28, 2009

நிறைந்தது!



179.
ஆரணப் பொருளாம் வித்தியாநந்தம் விளங்க வேதுங்
காரணங் குறைவி லாமற் கைவல்லிய நவநீதத்தைப்
பூரணமாக்க வேண்டிப் பூர்வமா நன்னிலத்தில்
நாரண குருநமக்கு நவின்றனர் யோகில் வந்தே

ஆரண (வேதாந்த மஹா வாக்கிய) பொருளாம் வித்தியாநந்தம் (ஞானசுகம்) விளங்க ஏதும் (எவ்வளவும்) காரணம் குறைவில்லாமல் கைவல்லிய நவநீதத்தைப் பூரணமாக்க வேண்டிப் பூர்வமா (பழமையான) நன்னிலத்தில் நாரண குரு யோகில் (யோக நிஷ்டையில்) வந்தே நமக்கு நவின்றனர்.

180.
குலவுசற் குருவின் பாதகுளிர் புனற்றலைமேற் கொண்டால்
உலகினிற் றீர்த்த மெல்லா முற்றபே றாடைவார் போல
நலமையா குங்கை வல்லிய நவநீத நூலைக் கற்றோர்
பலகலை ஞான நூல்கள் படித்தஞா னிகளாய் வாழ்வார்.

குலவு சற்குருவின் பாத குளிர் புனல் (நீர்) தலை மேற் கொண்டால், உலகினில் தீர்த்தம் எல்லாம் உற்ற பேறு அடைவார் போல, நலமையாகும் (மோட்ச சுகம் தரக்கூடிய) கைவல்லிய நவநீத நூலைக் கற்றோர் பலகலை ஞான நூல்கள் படித்த ஞானிகளாய் வாழ்வார்.

--
இத்துடன் ஞான வழி நிறைவடைகிறது.

No comments: