Pages

Thursday, October 22, 2009

ஞானம் உண்டானதற்கு அநுபவம்



172.
சர்வம் பிரம மயம் என்றும் சர்வம் மித்தை என்றும் ஞானம் உண்டானதற்கு அநுபவம்:

அப்படியிருக்கச் சித்த மலைதலால் விவகாரத்தில்
எப்படி கூடுமென்னி லென்னைவிட் டொன்றுமில்லை
இப்படிகண்ட வெல்லா மென்மய மென்கனாப் போற்
கற்பித மென்று தானே காண்கின்ற சித்து நானே

[உலக] விவகாரத்தில் சித்தம் அலைதலால் அப்படி [உறுதியாய்] இருக்க எப்படி கூடும்? என்னில், என்னை விட்டு ஒன்றுமில்லை. இப்படி கண்ட எல்லாம் என் மயம், என் கனா போல் கற்பிதம் என்று தானே காண்கின்ற சித்து நானே [என்று இரு]
--
அது சரி அந்த அனுபவம் எப்படி வருமாம்?
என்னைத்தவிர அன்னியமா இங்கே ஒன்றும் இல்லை. இங்கு நாம ரூபமாய் தோன்றிக்கொண்டு இருக்கும் அனைத்தும் உண்மையில் என் மனமே. என் மனம் இது பாம்புன்னு நினைச்சா அது பாம்பா தோணுது. கயிறுன்னு நினைச்சா கயிறா தோணுது.

உடனே இதெல்லாம் உடான்ஸ் ன்னு தோணுதில்லே?

ஹிப்நாடிச நிகழ்ச்சி எதுக்காவது போய் இருக்கீங்களா?
பயிற்சி பெற்ற ஹிப்நாடிச வல்லுனர்கள் அரங்கத்தை ஒரு சுத்து சுத்தி வருவாங்க. யார் வலிமையில்லாத மனம் கொண்டவங்கன்னு அவங்களுக்குத் தெரியும். அவங்களை மேடைக்கு கூப்பிட்டு போய் ஹிப்நாடிச தூக்கத்தில ஆழ்த்துவாங்க. அதாவது அவங்க மனசை கட்டுப்படுத்துவாங்க. மனசு கட்டுக்கு வந்தாச்சுன்னா வித்தைகள் ஆரம்பிக்கும். அந்த நேரத்தில "இத பார்! ஒரு எரிகிற குச்சி. உன் கையை சுடப்போறேன்"னு சாதா குச்சியை கை மேல அழுத்தினாலே போதும். அந்த இடம் சுட்டு கொப்பளிச்சு போயிடும். மனுஷனாலேயே இது முடியும்ன்னா பரம்பொருளால  என்னதான் முடியாது?

கடலில பாக்கிற அலை திவலை அனைத்தும் நீர் அன்றி வேறில்லை. அதே போல் இவை அனைத்தும் என்னை அன்றி வேறில்லை, நானே. இந்த தோற்றம் அனைத்தும் இருட்டில் பாம்பு போலும் கானல் நீர் போலும் கனா போலும் கற்பிதமே ஆகும்.


2 comments:

Geetha Sambasivam said...

அப்பாடா!

திவாண்ணா said...

என்ன அப்பாடா? முடியப்போகுதுன்னு தெரிஞ்சாச்சா? :-))