Pages

Friday, October 16, 2009

வித்தையானந்தம் ...



164.
வித்தையானந்தத்தை கூறத் துவங்கி பிரமமே கூடஸ்தன் எனல்.

பிறந்ததுண் டானா லன்றோ பிறகு சாவதுதா னுண்டாம்
பிறந்ததே யில்லை யென்னும் பிரமமா வதுவு நானே
பிறந்தது நானென் றாகிற் பிரமமன் றந்த நானே
பிறந்தது மிறந்ததற்ற பிரமமா நானே நானே

பிறந்தது உண்டானால் அன்றோ பிறகு சாவதுதான் உண்டாம். பிறந்ததே இல்லை என்னும் பிரமம் ஆவதுவும் நானே. பிறந்தது நான் என்றாகில் அந்த நானே பிரமம் அன்று. பிறந்தது இறந்தது அற்ற பிரமமா(கிய) நானே நானே. [தத்வமஸி- சாம வேத மஹா வாக்கியம்]
ஆத்மா பிறப்பு இறப்பு இல்லாதது. பிறப்பு இல்லை என்பதால் மூலமாக இருக்கும் ஆத்மாவேதான் நான்.

165.
கூடஸ்தனே பிரமம் எனல்:
நானென்ற பிரம மான நானேநா னறியே னென்றால்
நானென்ப தேது பின்னை நம்முடைப் புந்தி யென்னில்
தானது மயக்கந் தன்னிற் சாகுமே சாவாதாகி
நானென நிறைந்திருந்த ஞானமா நானே நானே

நானென்ற பிரமமான நானே நான் [என] அறியேன் என்றால், நான் என்பது பின்னை ஏது? நம்முடைப் புந்தி என்னில் தான் அது (சுசுப்தி) மயக்கம் தன்னில் சாகுமே? [ஆகவே] சாவாது ஆகி நான் என நிறைந்திருந்த ஞானமாகிய (கூடஸ்தனே) நானே நானே. [அஹம் ப்ரம்ஹாஸ்மி-யஜுர் வேத மஹா வாக்கியம்]
--
நான் பிரம்மம். இப்படி அறியாவிடில் நான் என்பது வேறு என்ன? அது புத்தி எனில் புத்திதான் சுசுப்தியில் இல்லாது போய்விடுமே? ஆகவே சாகாமல் இருக்கும் ஞானமாகிய கூடஸ்தனே நான்.


2 comments:

Geetha Sambasivam said...

இது கொஞ்சம் பரவாயில்லை. புரிகிறதோனு ஒரு எண்ணம்! :(

திவாண்ணா said...

இதோட இன்னும் 2 பதிவுகள் சேத்து படிக்கணும். அப்ப சரியா புரியும்.