Pages

Thursday, August 13, 2009

அசத்தான மாய சக்தி உளதென்பது எப்படி?



இறப்பும் பிறப்பும் பொருந்த- எனக்
கெவ்வணம் வந்ததென் றெண்ணிநான் பார்க்கில்
நினைப்பு மறப்புமாய் வந்த-வஞ்ச
மாயா மனத்தால் வளர்ந்தது தோழி-சங்கர
தாயுமானவர்

இங்கே கொஞ்சம் நின்னு சுதாரிச்சுக்கலாம்.
நாம் பார்க்கிற அனைத்தும் பிரம்மமே. அதன் பல்வேறு வெளிப்பாடுகளே. இது அத்வைத நோக்கிலே பாத்து பாத்து யோசிச்சு கொஞ்சம் கொஞ்சம் அனுபவமும் கிட்டி உறுதிப்படுத்திக்கொள்கிறது.
ஆனா நாம் அந்த இடத்துக்கு வரும் வரை கவனமாக இருக்கணூம். நம்ம கால்கள் எந்த பிரபஞ்சத்திலே ஊன்றி இருக்கோ அதுக்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடந்துக்கணும். யானைக்கதையை கிருஷ்ண மூர்த்தி சார் எழுதினது நல்ல பொருத்தம். ப்ரம்ம நிலைக்கு போகாம, அதோட டேஸ்ட் கூட கிடைக்காம நீயும் பிரம்மம் நானும் பிரம்மம் ன்னு பேசிகிட்டு திரியறது பிரச்சினையிலேதான் கொண்டுவிடும்!

அதுக்குன்னு நாம பாக்கிற இந்த லோகமே நிஜம்ன்னும் நினைச்சுடக்கூடாது. நாம் ஏதோ ஒரு நாடகத்திலே மாட்டிகிட்டு இருக்கோம். அதிலே நமக்கும் ஒரு ரோல் இருக்கு. அதை சரியாவே செய்துவிட்டு போவோம். அதே சமயம் நாம் நடிக்கிறது ஒரு நாடகம் என்கிற நினைப்பும் இருக்கட்டும்!

99.
அசத்தான மாய சக்தி உளதென்பது எப்படி?

இல்லை யாகிய சத்தியை யுண்டென்ப தெப்படி யெனக் கேட்கில்
புல்லை யாதியா மசேதனப் பொருளெலாம் பூத்துக்காய்ப் பனபாராய்
நல்லை யாமக னேயதிற் சிற்சத்தி நடந்திடா திருந்தக்கால்
தொல்லை யாய்வருஞ் சராசர வுயிர்க்கெலாஞ் சுபாவங்கள் வேறாமே

இல்லையாகிய சத்தியை உண்டென்பது எப்படி எனக் கேட்கில், புல் ஆதியாம் அசேதனப் பொருளெலாம் பூத்துக் காய்ப்பன பாராய். நல்லையாம் மகனே அதிற் சிற்சத்தி நடந்திடாது (செல்லாது) இருந்தக்கால்,(இருப்பின்) தொல்லையாய் (தொன்று தொட்டு) வரும் சராசர உயிர்க்கெல்லாம் சுபாவங்கள் வேறாமே.
--
இன்னது என சொல்ல முடியாத இந்த சக்தி இருக்கிறது என்று எப்படி சொல்வது? நகராத புல் பூண்டு, செடி முதலியவை வளர்வதும், பூக்கும் காலத்தில் பூப்பதும், காய்க்கும் காலத்தில் காய்ப்பதும் பழுத்து உதிரும் காலத்தில் பழுத்து உதிருவதும் பார்ப்பாயாக. பிரம்மத்தின் சித் சக்தி அவற்றில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு இருக்காது.

"மெதட் இன் தி மேட்னஸ் "ன்னு ஆங்கிலத்தில சொல்கிறது போல, பொய்யானாலும் இதில ஒரு ஒழுங்கு இருக்கே. இயற்கையை பாத்தா ஒவ்வொரு விஷயத்திலும் இதை பாக்க முடியுது. உண்மையில்லை சினிமாதான்னாலும் நல்ல சினிமாவா இருக்கு. தீ எப்பவுமே சுடுது. சூரியன் ஒரு ஒழுங்கிலேயே உதிச்சு மறையுது. இதுக்கெல்லாம் பின்னால ஒரு சக்தி இல்லைனன்னா இப்படி நடக்காது. சுபாவங்கள் எப்போ வேண்ணா எப்படி வேண்ணா மாறும்.

100.
கருப்பை முட்டையுட் பறவைகள் பலநிறங் கலந்தசித் திரம்பாராய்
அருப்ப மாம்சத்தி நியமமில் லாவிடி லரசிலா நகர்போலாம்
நெருப்பு நீரதாங் கசப்புமே மதுரமா நீசனு மறையோதும்
பொருப்பு மேகமாங் கடலெலா மண்களாம் புவனமிப் படிபோமே

கருப்பை முட்டையுள் பறவைகள் பல நிறம் கலந்த சித்திரம் பாராய். அருப்பமாம் (அருவமாம்) சத்தி நியமம் இல்லாவிடில் அரசிலா நகர் போலாம். நெருப்பு நீரதாம் (நீர் ஆகும்). கசப்பும் மதுரமாகும். நீசனும் மறையோதும். பொருப்பு (நகராத மலைகளும்) மேகமாம். கடல் எலாம் மண்களாம். புவனம் இப்படி போமே.
[பிரம்மத்தின் சித் சக்தி அவற்றில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு இருக்காது.]


No comments: