Pages

Saturday, August 8, 2009

மாயை என்கிறது எப்படிப்பட்டது?



மாயை என்கிறது எப்படிப்பட்டது? மாயை யார் யாருக்கு இருக்கு? அது எப்படி வந்தது? அது வருவானேன்? மாயை என்பது பிரமத்திலிருந்து வேறா?
அப்படியானால் வஸ்துவும் (பிரம்மமும்) ஒரு பொருள் இல்லாமல் இரண்டு ஆகுமே. எல்லாமே பிரம்மம் என்கிறதுக்கு இது ஒத்துப்போகலையே. மாயை என்பதும் பிரமமும் ஒண்ணுதான்னா மாயா வஸ்து போல் பிரம வஸ்துவும் பொய் ஆகுமே?
(இந்த பிரம்ம விசாரணையில இறங்கிய போது எனக்கு ரொம்ப புதிரா இருந்தது இது.)

94.
மாயை யென்பதே துடையரா ரெப்படி வந்தது வருவானேன்
மாயை யென்பது பிரமத்தின் வேறெனின் வஸ்துவு மிரண்டாமே
மாயை யென்பதும் பிரமமு மொன்றெனின் வஸ்துவும் பொய்யாமே
மாயை யென்றமே கங்களுக் கொருசண்ட மாருத குருமூர்த்தி

மாயை என்பது ஏது? உடையவர் யார்? எப்படி வந்தது? வருவானேன்? மாயை என்பது பிரமத்தின் (பிரமத்திலிருந்து) வேறு எனின் வஸ்துவும் இரண்டாமே. மாயை என்பதும் பிரமமும் ஒன்றெனின் வஸ்துவும் (மாயா வஸ்து போல் பிரம வஸ்துவும்) பொய்யாமே. மாயை என்ற மேகங்களுக்கு ஒரு சண்ட மாருதம் (போன்ற) குருமூர்த்தி.
--
95.
அதனை யின்னதென் றுரைத்திடப் படாமையா லவாச்சிய வடிவாகும்
இதுத னக்குள துடலியா னுலகுமெய் யெனுமவ ருடையோர்கள்
கதையி லாதபொய் வந்ததிப் படியென்று கண்டபே ரிலைமைந்தா
விதன மாயையேன் வந்ததென் றாற்புத்தி விசாரமற் றாதனாலே

அதனை இன்னதென்று உரைத்திடப் படாமையால் அவாச்சிய வடிவாகும். இது தனக்கு உளது, உடல் யான், உலகு மெய் எனும் அவர் (பேர்கள்) உடையோர்கள். கதை இல்லாத (இன்ன விதம் என சொல்ல முடியாத) பொய் வந்தது இப்படி என்று கண்ட பேர் இல்லை மைந்தா. விதன (துன்பமான) மாயை ஏன் வந்தது என்றால் புத்தி விசாரம் அற்றது அதனாலே.
--
மாயை இப்படிப்பட்டது ன்னு சொல்ல முடியாது. அதனால அது சொல்லால் சொல்லப்பட முடியாத வடிவானது (அநிர்வசனீயம்). யார் நான் எனது என்கிற பற்று உடையவராக இருக்கிறாங்களோ அவங்க மாயை உடையவர்கள். இப்படிப்பட்டதுன்னு சொல்ல முடியாத அதை இப்படி உருவாயிற்று என்று கண்டவரும் யாரும் இல்லை. ஏன் வந்தது என்றால் "நான் யார்? இந்த உலகம் என்கிறது என்ன? இது எப்படி வந்தது?” என்ற விசாரணை இல்லாததால் வந்தது.

2 comments:

Geetha Sambasivam said...

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்!

திவாண்ணா said...

//கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்! //
:-))