Pages

Sunday, August 2, 2009

தியானத்துக்கு இந்த சக்தி இருக்க விசார ஞானம் எதற்கு?




86.
தியானத்துக்கு இந்த சக்தி இருக்க விசார ஞானம் எதற்கு?
பிரம ரூபத்தைத் தியானித்த பேர்களும் பிரமமா குவரென்றால்
நரச ரீரமாங் குரவனே விசாரமேன் ஞானமே னென்னாதே
பரம பாவனை பரோட்சமாம் பின்பந்தப் பரோட்சமே யபரோட்சம்
திரவி சாரமா ஞானமே முத்தியாந் தீர்வையீ தறிவாயே

பிரம ரூபத்தைத் தியானித்த பேர்களும் பிரமமாகுவர் என்றால், நர சரீரமாம் குரவனே, விசாரம் ஏன்? ஞானமேன்? என்னாதே. பரம பாவனை (பிரமத் தியானம்) பரோட்சமாம். (மறைவாயுள்ளது). (தியான பரிபாகத்தின்) பின்பு அந்தப் பரோட்சமே அபரோட்சம் (புலப்படும்) ஆகும். திர(திடமான) விசாரமாம் (விசாரத்தால் வரும்) ஞானமே முத்தியாம். [ஸ்ருதி ஸ்ம்ருதிகளின்] தீர்வை ஈது அறிவாயே.
--
முதலில் மறைவாக உள்ள பிரம்ம தியானம் பின்னால் திடமாகி புலப்பட்டும். அதுவே மோக்ஷமாகும். இது வேத வாக்கியம்.

போச்சுடா! குழம்புதே. அந்தக்கரணம் போனாதானே பிரம்மமாகலாம்? கூடஸ்தனை ஜீவனா ஆக்கறது அதுதானே. இந்த அந்தக்கரணம் சம்பந்தம் இருக்க எப்படி பிரம்ம அனுபவம் ஏற்படும்?
சொரூப ஞானம் அந்தக்கரண விருத்தி கூட சேர்ந்து ஞானமாகும்னா அந்தக்கரண விருத்தி இருக்கையில் அகண்டாநுபவம் எப்படி ஏற்படும்?
--
இரண்டு மூன்று பாடல்களாக சேர்த்து போட்டால் மிகவும் நீளமாகி விடுகிறது. சின்னதாக போட்டால் இப்படி மர்மக்கதை போல ஆகிவிடுகிறது! மன்னிக்கவும். எழுப்பப்படும் கேள்விகளுக்கு அடுத்த பதிவுகளில் விடை வந்து விடும்!

1 comment:

Kavinaya said...

//சின்னதாக போட்டால் இப்படி மர்மக்கதை போல ஆகிவிடுகிறது!//

:)))