Pages

Monday, June 29, 2009

திருப்பியும்...ஞானி தொழில் செய்கிறானா இல்லையா?




32
ஆனாலையா குருவே காண்ப தசத்திய மென்றாலும்
நானாவிவ காரந்துய ரலவோஞான சுகந்தருமோ
போனாலன்றோ நன்றா நிட்டை புரிந்திடல் வேண்டாவோ
தானாநிட்டை புரிந்தாற் செய்கை தவிர்த்தவனெப்படியோ

ஆனால் ஐயா குருவே காண்பது அசத்தியம் என்றாலும் நானா விவகாரம் துயரலவோ? ஞான சுகந்தருமோ?[இரண்டற்ற அகண்டாகார அனுபவத்தால் உண்டாகும் ஞான சுகம் அப்போது இருக்குமோ?] [விவகாரம்] போனால் அன்றோ நன்றா நிட்டை புரிந்திடல்? (நிற் விகற்ப சமாதியில் இருத்தல்) அது வேண்டாவோ? தானா நிட்டை புரிந்தால் செய்கை தவிர்த்தவன் எப்படியோ? [ஒரு இடத்தில் அமர்ந்து தேக சேட்டையை நிறுத்தி மனதை ஒடுக்கி நிஷ்டை பழகுவதும் ஒரு தொழில்தானே? அப்படி இருக்க எப்படி தொழிலற்றவன் என்று சொல்லலாம்?]

ஞானி தொழில் செய்கிறானா இல்லையா ந்நு உறுதி செய்துக்க திருப்பியும் கேட்கிறான் சீடன். சரி உடம்பு இருக்கிற வரை ஏதாவது விவகாரம் இருக்கும்ன்னு சொல்லறீங்க. நாம கண்ணால பாக்கிறதெல்லாம் அசத்தியம்ன்னா அதோட விவகாரங்களில சம்பந்தமானா துன்பம்தானே. இரண்டற்ற அகண்டாகார அனுபவத்தால் உண்டாகிற பிரம்ம ஆனந்தம் - ஞான சுகம் அப்போது இருக்குமா என்ன? அது வேணுமானா நிஷ்டை பழகணும்தானே? அப்படி நிஷ்டையில உக்காந்தா அது தொழில்தானே?
அதாவது சும்மா மனசை அடக்கி உட்காருகிறது கூட வேலைதானே என்கிறான் சீடன்.

அப்பா, பிராரப்த கர்மா கழிகிற வரை விவகாரம் இருக்கத்தான் இருக்கும். அப்படி இல்லாட்டா அது தீர முடியாது. தியானம், சமாதி எல்லாம் நிச்சயம் வேலைதான். சந்தேகமில்லை. அதெல்லாம் அந்தக்கரணத்தால செய்கிற வேலைதான். துரிய நிலையை அடைஞ்ச சாக்ஷாத்காரத்தை அடைஞ்சவங்களுக்கு செய்கிற வேலைன்னு ஒண்ணும் கிடையாது. அப்படி செய்தா அவங்க சீவன் முக்தன் இல்லை. இப்படி சர்வ நிச்சயமா சொல்கிறார் குரு.......

No comments: