Pages

Monday, June 1, 2009

ஸ்ரீ கோடி காயத்ரி ஜப யக்ஞம்




எங்க ஊரில் பத்து வருடங்களாக ஆண்டு தோறும் ஸ்ரீ கோடி காயத்ரி ஜப யக்ஞம் நடை பெற்று வருகிறது.

சங்கல்பம்: நாடெங்கும் நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிறைந்து தன தான்ய வளம் ஏற்பட வேண்டும், தர்மத்தை அனுசரிப்போர்களுக்கு அதர்ம சக்திகளால் ஏற்படும் இன்னல்கள் விலக்கப்பட வேண்டும்.

பங்கு கொள்வோர் பிரதி வருஷம் மகரசங்கராந்தி அன்று துவங்கி சில நியமங்களுடன் தினசரி 1008 காயத்ரி ஜபம் செய்து வருகிறார்கள். ஜூன் முதல் ஞாயிறு அன்று அதன் நிறைவாக ஹோமம் செய்கிறார்கள். சுமார் நூறு பேர் தலா ஒரு இலட்சம் இலக்கு நிர்ணயித்து செய்கிறார்கள். மொத்தமாக கோடி தாண்ட வேண்டும் என்பது முயற்சி.

ஜப யக்ஞ நிறைவாக செய்யும் ஸஹஸ்ர காயத்ரி ஜோமம் வருகிற ஞாயிறு (7-6-2009) அன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெறும். இடம் திருப்பாதிரிப்புலியூர் சங்கர பக்த ஜன சபா வளாகம், பாபு ராவ் தெரு.

சுமார் 12 மணிக்கு நிறைவுறும். அப்போது மாதர் செய்யும் காயத்ரி பூஜை நடை பெறும்.

தரிசித்து பலனடை ய வேண்டுகிறேன்.

அன்புடன்

தி. வாஸுதேவன்.


2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லது...நல்லபடி நடக்க இறைவன் அருளட்டும்.

திவாண்ணா said...

நன்றி மௌலி!