Pages

Tuesday, June 30, 2009

சமாதி 2 வகை



33.
கிருத கிருத்திய ஞானிக்கு விவகாரம் தீருங்காலமும் அவன் யாதொரு தொழிலும் செய்வதில்லை எனவுங் கூறல்:

தெரிதரு மகனேயாரம் பத்தொடுதீரும் விவகாரம்
உரியதியானமும் விவகாரங்களு முள்ள தொழிலன்றோ
துரியபரம்பொரு ளானவர் வேறொருதொழில் செய்வதுமுண்டோ
அரியசமாதிகள் பழகுவனே லவனாரூடனுமன்றே

தெரிதரு (அறிவுள்ள) மகனே! ஆரம்பத்தொடு தீரும் விவகாரம். [ஆரம்பித்துவிட்ட பிராரப்த கர்மம் ஒழியும் வரை விவகாரம் இருக்கும்] உரிய தியானமும் விவகாரங்களும் உள்ளத்தின் (அந்தக்கரண) தொழிலன்றோ? துரிய [நிலை அடைந்து] பரம்பொருளானவர் வேறொரு தொழில் செய்வதும் (செய்யத்தேவையும்) உண்டோ? [அப்படி] அரியசமாதிகள் பழகுவனேல் அவன் ஆரூடனும் அன்றே.

சமாதி 2 வகை. 1. சவிகற்ப சமாதி 2. நிர்விகற்ப சமாதி.
விகற்பம் ன்னா பேதம் வேறுபாடு. சவிகற்ப சமாதின்னா கொஞ்சம் வேறுபாடு இருக்கிற சமாதி.
சவிகற்ப சமாதியில் ஆன்மா அணு அணுவாக அனுபவிக்கப்படிகிறது. இதில் பார்ப்பவன், பார்த்தல், பார்க்கப்படுபவன் என பேதம் உண்டு. (திரிபுடி என்பது இதுவே -ஞாத்ரு, ஞானம், ஞேயம் [subject - object - action] ).

நிர்விகற்ப சமாதி கொஞ்சம் கூட வேறுபாடு இல்லாத சமாதி. இதுல திரிபுடி ஒழிஞ்சு விடும். அகண்டாகாரமான சாக்ஷாத்கார நிலை.

தானாய் தன் மனமே யல்லாலொன்றைத்
தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே
போனாலும் கற்பூர தீபம் போலும்
போயொளிப்ப தல்லாது புலம்வேறி ன்றாம்
ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற
ஞாதுருவு நழுவா னழுவி நிற்கும்
ஆனாலு மிதன் பெருமை யெவர்க்கார் சொல்வா
ரதுவானா லதுவாவ ரதுவே சொல்லும்
தானாய் தன் மனமே அல்லால் ஒன்றைத் தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே
போனாலும் கற்பூர தீபம் போலும் போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம்
ஞானாகாரத்தினொடு ஞேயமற்ற ஞாதுருவு நழுவா நழுவி நிற்கும் ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு யார் சொல்வார்? அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்
(தாயுமானவர்)

முதல்ல சவிகற்ப சமாதிதான் ஒத்தருக்கு கிடைக்கும். அப்புறமா இருக்கிற கொஞ்சம் வித்தியாசமும் போய் நிர்விகல்பம் ஆகிடும்.

இதெல்லாம் இல்லாம சகஜ சமாதின்னு ஒண்ணு உண்டு. நிர்விகற்ப சமாதியோட கனவு போல சாப்பிடுகிறது முதலியத செய்து கொண்டு சதா நிஷ்டையில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஆரூடர் விவகாரங்களை செய்தாலும் அவை செயல் ஆகாது. ஏன்னா அவை அவர்களோட பார்வையில விவகாரத்தோட கூடிய சம்பந்தம் இல்லாதவை. அவர்களுக்கு ஞானமும் செய்கையும் பரஸ்பரம் விரோதமில்லை. அவங்களோட விவகாரத்துக்கு அனுபவம் விரோதமில்லை. அவங்களோட அனுபவத்துக்கு விவகாரம் விரோதமில்லை.

பின்னே சீவன் முக்தரா இருக்கிற சிலர் ஏன் இந்த தியானம் முதலானதெல்லாம் செய்கிறாங்கன்னு கேட்டா.....
முன்னேயே சொன்ன விஷயம் ஒண்ணு நினைவு இருக்கா பிராரத்தப்படி பல விதமா இவங்க இருப்பாங்கன்னு சில காரியங்கள் நடக்கும்ன்னு? அதுவும் அதை சேர்ந்ததுதான்.
மாதவம் செய்யினும் செய்வர் வாணிபம் செய்யினும் செய்வர் ன்னு முன்னே பாத்தோம்.
(தத்துவ விளக்கம் பகுதி - 97. )

"பிரம வித்துக்கள் இப்படி நான்கு விதமாக இருப்பானேன்?

பேதகர் மத்தால்வந்த பிராரத்த நாநாவாகும்
ஆதலால் விவகாரங்க ளவரவர்க் காவவாகும்
மாதவஞ் செயினுஞ்செய்வார் வாணிபஞ் செயினுஞ்செய்வார்
பூதலம் புரப்பாரையம் புகுந்துண்பார் சீவன்முத்தர்."

ஆரூட தசை அடையு முன்னே யார் இந்த தியானம் முதலானதை செய்கிறாங்களோ அவங்களையே கிரியை அற்றவன்னு சொல்ல முடியாது. ஆரூட தசை அடைஞ்சாச்சுன்னா அவர் கிரியை அற்றவரே கிருத கிருத்தியரே.

No comments: