Pages

Monday, May 25, 2009

ப்ரமாணங்கள் எட்டு விதம்.



ப்ரமாணங்கள் எட்டு விதம்.
ப்ரத்யட்சம்.
அநுமானம்
உபமானம்
சத்தம்
அருத்தாபத்தி
அநுபலப்தி
ஐதீகம்
ஆகமம்

1. பிரத்யட்சம்: நேரா ஒரு பொருளை பாக்கிறது. நாம ரூபவஸ்துக்களை இப்படிபாக்கலாம். அதாவது எதுக்கெல்லாம் ஒரு பேரும் ஒரு வடிவமும் இருக்கோ அதெல்லாம் இதில வரும்.

2. அநுமானம்: நேரடியா பாக்கிர ஒரு வஸ்துவை வெச்சுகிட்டு இன்னொரு விஷயத்தை இருக்கிறதாக அறிகிறது. இப்படீஈ வழியிலே போய் கொண்டு இருக்கிறோம். ஒரு இடத்திலே புகை வருகிறதை பாக்கிறோம். ஓ என்னமோ எரியுதுன்னு நினைக்கிறோம். தீயை நாம பாக்கலை; ஆனா புகை இருக்கிற இடத்திலே தீ இருக்கத்தான் இருக்கும்ன்னு நமக்கு அனுபவம். அதனால இப்படி அநுமானிக்கிறோம்.

3. உபமானம்: அறியாத ஒருபொருளை ஏற்கெனெவே தெரிஞ்ச ஒரு பொருளால தெரிஞ்சிக்கிறது.
ஒத்தர் மானை பாத்ததே இல்லை. அது எப்படி இருக்கும் ன்னு கேக்கறார். என்ன பதில் சொல்லறது? காட்டில பாக்கலாம். மரை பசு மாதிரி இருக்கும் ன்னு சொன்னா ஓஹோ அது போலவா ன்னு கொஞ்சம் புரிஞ்சுப்பார். இது உபமான பிரமாணம். பசு உபமானம். அதால அறியப்பட்டது உபமேயம்.


4. சப்த பிரமாணம். ஆப்த வாக்கியம்னும் சொல்வாங்க. நம்மால எல்லாத்தையுமே நேரில பாத்தோ அனுபவிச்சோ தெரிஞ்சுக்க முடியாது. இப்படிதான் தெரிஞ்சுக்கணும் ன்னா நமக்கு மிகக்குறைவான விஷயங்களே தெரிய வரும். அதனால என்ன செய்யறோம்? நம்பத்தகுந்தவங்க சொன்னா அதுவே நமக்கு பிரமாணம். ரொம்ப நாள் கழிச்சு ஒரு நண்பரை பாத்து பேசிகிட்டு இருக்கோம். "டேய் உனக்கு தெரியுமா ஸோ அன்ட் ஸோ செத்து போயிட்டாண்டா" என்கிறார். "அப்படியா! நம்பவே முடியலையே!" ன்னு பேச்சுக்கு சொன்னாலும் நாம அதை நம்பறோம். அவர் பொய் சொல்ல மாட்டார்ன்னு நம்பிக்கை.


1 comment:

Kavinaya said...

குரு சொன்னால் சப்த பிரமாணம். வேதவாக்கு. அப்படித்தானே?