Pages

Monday, May 11, 2009

சீவன் முத்தர் மகிமை



காயத்தில் வேறாகத் தன்னைக் கண்டோன்
காயமீ றினுமறியான் கன்னற் கட்டி
தீயிற்கா யினுமறிந்த போது மின்பந்
தீராத வாறுபோற் றெளிந்த ஞானி
மாயத்தின் மோகத்தாற் பேத மாகான்
மணந்தபர புருடன்மேல் மனஞ்சேர் மங்கை
நேயத்தான் மனைதொழில்கள் செய்யு மாபோ
னிகழ்தொழிற்செய் யினும்பரத்தி னிலமை நீங்கான்
-வாசிட்டம்

¨நினைப்பெலாம் விட்டு நிர்த்தொந்தனாய் ஞான சீலனாய் இருக்கிறவனுக்குத் தனக்குத்தானே வந்த போகத்தில் சுக துக்கங்களில்லை.¨
¨பிரம்ம ஞானியை புண்ணிய பாவ பலன்கள் தொடர மாட்டா; நிர்மல ஆகாசத்தைப் புகை தொடராதது போல¨
என்கிறது அஷ்டா வக்கிர கீதை.

ஏன்னா அவன் அஞ்ஞானிகளை மாதிரி சீவ பாவத்திலே பலனை கருதி எதையும் செய்கிறதில்லை. செயல்கள் எல்லாமே பிராரப்த பலனை பொறுத்தவை. அந்த பலன் வறுத்த விதை மாதிரி பொசிப்புக்கு மட்டுமே தகுதி உள்ளது. பாப புண்ணியங்களை உண்டாக்க தகுதி இல்லாதது என்கிறார் வள்ளலார்.

வறுத்தவிதை யுண்பதன்றி மாநிலத்தை கீன்று
செறுத்துவிதைப் பாரோ தெளி
-வள்ளலார்- பாசவியல்

குரு சொல்கிறார்: அன்புள்ள மகனே, ஜீவன் முத்தரை சேவிச்சவங்க பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணு பேரையும் மகிழ்ச்சி அடைய வைச்சு அரிய தவமெல்லாம் பண்ணி ஜன்ம சாபல்யம் பெற்றவங்களா ஆவாங்க ன்னு வேதங்கள் சொல்லுது.

தபஸ் பண்ணி திரிமூர்த்திகளிலே ஒத்தரை பாத்து வரம் வாங்கினா சிலசித்திகளும் புண்ணியங்களும் மட்டுமே கிடைக்கும், ஆனா மூணு பேரையும் ஒண்ணாவே பாத்துடலாமே! ப்ரம்மத்தோட சத்வ நிழல்தானே இந்த மூணு விதமா காணப்படுது! ஜீவன் முத்தரோ பரப்பிரம்ம சொரூபமே! இந்த ஞானியோட தரிசனத்தால வரங்களும் கிடைக்கும்; குரு கிடைத்து அவர் மூலமா முத்தியும் கிடைக்குமே!
அறிவால பல விஷயங்களை சாதிக்கலாம். ஆனா பிரம்மஞானத்தை அடைய முடியாது. அதனாலே எல்லாத்தையும்விட அதுவே கஷ்டமானது. அதனால ஞானிகளோட மகிமை அளவிட முடியாதது.
யாரான ஒரு பெரிய விஷயம் செய்துட்டதா சொன்னா, ஆமா, இதென்னடா பெரிய பிரம்ம வித்தை ன்னு சொல்வோம்.
கீதையிலே கண்ணனும் பிரம்ம ஞான சாதனமே மிகவும் வருத்தம் தருவதுன்னு சொல்கிறான். அதை அடைந்தவங்கள் நிசமாவே பெரியவங்கதானே!

திரிவித வுலகத் தரிதொரு ஞானி
தேர்விடத் தென்றுமோ ரொன்றை
யுரைசெயிற் பிரம வித்தையொத் தரிதோ
வென்றுமிவ் வுலகுரைப் பதனா
லரிசொல்கீ தையினும் பிரமசாதகரி
னார்க்குள வருத்தமென் பதனாற்
பெரியதோர் வருத்த மெனமறை துணிந்த
பிரமநா னெனவிருத் தலினான்
--
பிரிச்சு பாக்க
திரிவித உலகத்து அரிதொரு ஞானி
தேர்விடத்து என்றும் ஓர் ஒன்றை
உரை செயிற் பிரம வித்தை ஒத்தது அரிதோ
என்றும் இவ் உலகு உரைப்பதனால்
அரி சொல் கீதையினும் பிரம சாதகரினார்க்கு
உள வருத்தம் என்பதனால்
பெரியதோர் வருத்தம் என மறை துணிந்த
பிரம நான் எனவிருத்தலினால்.

-வைராக்கிய தீபம்.

104.
அதற்கு வேத பிரமாணம்:

சீவன்முத்தரைச் சேவித்தோர் சிவனயனெடு மாலான
மூவரு மகிழ நோன்பு முழுவதுஞ் செய்துசன்ம
பாவன மானாரென்று பழமறை முழங்கு மிப்பான்
மேவருஞ் சீவன்முத்தர் விதேகமுத்தியுநீ கேளாய்

சீவன்முத்தரைச் சேவித்தோர் சிவன், அயன் (பிரமன்), நெடு மாலான (விஷ்ணு) மூவரும் மகிழ நோன்பு முழுவதும் (தவங்கள் அனைத்தும்) செய்து சன்ம பாவனமானார் (பரி சுத்தமானார்) என்று பழ மறை முழங்கும். இப்பான் (இனி) மேவருஞ் (மேவ அரும்=பொருந்துதற்கு அரிய) சீவன்முத்தர் [அடையும்] விதேகமுத்தியும் (உடல் நீங்கிய முத்தி) நீ கேளாய்.

No comments: