Pages

Thursday, February 19, 2009

உலகம் எப்படி வந்தது?



சில நூல்களிலே இதே உற்பத்தி வேற விதமாயும் சொல்லப்படுது. சீவர்கள்கிட்டே இருக்கிற பிரிக்க முடியாதது எதுவோ அதை மக தத்துவம் (மஹத்) என்கிறாங்க. இதேதான் அகங்காரம் ஆகும். இந்த உலகம் தோன்ற காரணமா இருக்கிறதை அகங்காரத்தில் இருந்து வருகிற வைகரி, தைசதன், பூதாதி தத்துவங்களாக சொல்கிறங்க. இதை மேலே விசாரிக்க வேண்டுமானால் இங்கேயும் இங்கேயும் போய் பாத்து படிச்சு மெய்கண்ட சித்தியார் சுபக்கத்திலே என்ன சொல்கிறார்ன்னு புரிஞ்சதை இங்கே சொல்லலாம்.


ஜகத் உற்பத்தி வேறு வழியாக சொல்லப்படுவது:

31. ஒருவழி யிதுவா மித்தை யொருவழி வேறாச் சொல்வர்
மருவுமவ் வியத்தந் தானே மகதத்துவ மாகு மந்த
அருண்மக தத்துவந்தா னகங்கார மாகு மென்றும்
கருவகங் காரமூன்றாக் காட்டிய குணமா மென்றும்

(சிருஷ்டி கிரமங்களில்) ஒரு வழி இதுவாம். இதை ஒரு வழி வேறாய் [உம் பெரியோர்] சொல்வர். [சீவர்களிடம்] மருவும் (அடங்கியுள்ள) அவ்வியத்தந்தானே மக தத்துவமாகும் [என்றும்] அந்த அருண் மக தத்துவந்தான் அகங்காரமாகும் என்றும், கருவ (செகத்துக்கு காரணமான அகங்கார தத்துவம்) அகங்கார மூன்றாக காட்டிய குணமாம் (வைகரி, தைசத, பூதாதி என மூன்று அகங்காரங்களாகும்) என்றும் [சொல்வர்]

முதலிலே இருக்கிறது சத் சித் ஆனந்தமான பரம்பொருள் மட்டுமே. சத் ன்னா இருப்பு. existence. சித் அறிவு- knowledge. ஆனந்தம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

பிரம்மம் எப்போதுமே அப்படியே இருக்கத்தான் இருக்கும். மாறவே மாறாது.

பின்னே இந்த உலகங்கள் எல்லாம் எப்படி வந்ததுன்னா ஒரு சினிமா படம் போல. இருக்கு, ஆனா உண்மையில்லை. உண்மை இல்லைனாலும் அதுல ஒரு லாஜிக் இருக்கு. சில விஷயங்கள் எதிர் பார்த்தபடி நடக்குது. அதால சில பாதிப்பு இருக்கு.
சினிமா பாத்துட்டு வந்த ஆசாமியை என்னப்பா சினிமான்னு கேக்கிறோம். அவரும் கதை சொல்லறார். எப்படி சொல்லறார்?

ஒரு பையன் இருந்தான். இங்கே போனான், இப்படி பண்ணான்னு சொல்கிறார். நாமும் அது அத்தனையும் நடக்கலைன்னு தெரிஞ்சாலும் ஆர்வமா கேக்கிறோம். சொல்கிற கதை கொஞ்சம் உருப்படியா இருந்தா அதுல ஒரு லாஜிக் இருக்கும். சொன்ன விதம் நம்மை பாதிக்கும். முன் காலத்திலே எல்லாம் சினிமா பாத்து பெண்கள் அழவே அழுதுடுவாங்க!

அது போலவே பிரம்மம் எப்போதுமே இருக்கு, இருக்கும் ன்னு தியரில தெரிஞ்சாலும் சினிமா கதை கேட்கிறா மாதிரி இதையும் விசாரிக்கலாம் - உலகம் எப்படி வந்ததுன்னு!
இந்த ப்ரம்மத்திலேந்து மூன்று குணங்கள் வரும்ன்னு பாத்தோம். இந்த குணங்களில சித் - இருப்போட நிழல் - சாயல் படியும். இந்த சாயலை குணத்திலேந்து நம்மால தனியா பிரிக்க முடியாது; குணத்திலே முழுமையா பரவி இருக்கும்; பாக்க முடியாதபடி சூக்குமமா இருக்கும்.

முதல்லே பாக்கபோறது சத்துவ குணத்திலே படிகிற சாயை என்ன ஆகிறது ன்னு.


4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா :-)

திவாண்ணா said...

இப்படி எழுதினா பயமா இருக்கு!
உம்! சிரிச்சுகிட்டுதான் உள்ளேனய்யாவா? அப்ப சரி, அடென்டன்ஸ் மார்க் பண்ணிடலாம்.

Kavinaya said...

ம்.. அப்புறம்?

(மௌலி எல்லா இடத்திலயும் உள்ளேனய்யாதான் போட்டுக்கிட்டிருக்கார். ஏன் மௌலி?)

திவாண்ணா said...

பிஸி பேளா ஹுளீ!