Pages

Monday, February 16, 2009

மூலப்ரக்ருதி மீள் பார்வை



முதலிலே ஒரு நிலையை எடுத்துப்போம்.

எல்லாமே ஒரே குழம்பா இருக்கு. – மேட்டர் எனர்ஜி காம்ப்லெக்ஸ் (matter energy complex)- ன்னு சொல்லலாமா?
க்வான்டம் பிஸிக்ஸ் போனா அப்படித்தான் சொல்லாட்சி இருக்கு.
இது சக்தின்னும் சொல்ல முடியாம, இது பருப்பொருள்ன்னும் சொல்ல முடியாம.

ரொம்ப நாள் முன்னே ஒளியை ஆராய்ஞ்சப்பவும் இப்படித்தான் சொன்னாங்க. அதை சக்தின்னு நினைச்சு சோதனைபண்ணா சக்தி மாதிரியும் இருக்கும். இல்லை பருப்பொருள்ன்னு சோதனைப்பண்ண அதுக்கும் ஆதாரம் இருக்கும். குழம்பிப்போனாங்க.
பின்னால க்வாண்டம் பிசிக்ஸ் வந்தது. பல விஷயங்கள் மாறிப் போச்சு.
முதல்லே ப்ரோடான், நியூட்ரான், எலக்ட்ரான்னு சொன்னாங்க. பிறகு அதுக்கும் உள்ளே போய் க்வார்க் ன்னு பாத்து அதெல்லாம் இப்படி இருந்தா அது ந்யூட்ரான், இப்படி இருந்தா ப்ரோட்டான் ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போ தனித்தனியா இருந்தது உண்மையிலே ஒண்ணே; வெளிப்பாடு வேறேன்னு ஆச்சு. இதுக்குள்ளே போகப்போக ஆச்சரியங்கள்தான் அதிகமாச்சு. இதோட தர்க்கரீதியா மேலே என்னன்னு யோசிச்சு பாத்தா எல்லாம் ஒண்ணே என்கிற நம்ம பிரம்ம கோட்பாடு வந்துடும். எல்லாம் சக்தி மயம். கிடக்கட்டும்.

இங்க சொல்ல வந்தது ஒரே விஷயம் - சக்தியா இல்லை பொருளான்னு தெரியாத ஒரு குழம்பா இருந்தது. எல்லாமே ஒண்ணா லயமாகி இருந்தது. இதுக்கு மூல ப்ரக்ருதி ன்னு பேர்.
இதிலேந்து சீவர்கள் தோன்றி இந்த உலகம் தோன்றி காரியங்கள் நடந்து...
அஹா! காரியம் நடந்துன்னு சொன்னா அது கர்மா ஆயிடுத்து.
அப்ப அதுக்கு எதிர்வினை இருக்கும், பலன் இருக்கும். அதை அனுபவிச்சு தீர்க்கணும் என்கிறது இயற்கை விதி. அப்படி தீர்க்காட்டா?

தீர்க்காட்டா திருப்பி பிறப்போம். அப்படி பிறக்கும்போது மேலும் பல காரியங்களை பண்ணுவோம்; திருப்பி பிறப்போம்.
இப்படி திருப்பி திருப்பி பிறக்கிறதை விடணும் என்கிறதுதான் நம்ம குறிக்கோள். அப்பதான் கஷ்டமில்லாம ஆனந்தமா இருக்கலாம். ஏன்னா பிறப்பில்லத நிலை பூரணமான நிலை. அங்கே இருப்போம்; எல்லாமே அறிஞ்சு இருப்போம்; ஆனந்தமாயும் இருப்போம். இதைத்தவிர வேற ஒண்ணுமில்லை.
சரி அப்படி ஆகலை, திருப்பி திருப்பி பிறந்தா இப்படியே முடிவில்லாம போய் கொண்டு இருக்குமா?



2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இது, இது.... :-)

திவாண்ணா said...

அப்பாடா! இப்ப சரியான ரூட் லே போறேன் போல இருக்கு!