Pages

Thursday, January 15, 2009

உபதேசம் ஆரம்பம்



சீடர்களுக்கு இருக்கிற மட்டத்துக்கு தகுந்த உபதேசம்தானே செய்யணும்? எடுத்த எடுப்பிலே ஞான மார்க்கத்தை காட்ட முடியுமா? அதுக்கு தேவையான வளர்ச்சி இல்லைனா குழம்பி இல்லே போயிடுவாங்க? அதனாலே அவங்களை ஸ்டடி செய்ய கொஞ்ச நாள் ஏதாவது வேலை செய்து கொண்டு தன்னோட இருக்க வைத்து அப்புறம்தான் உபதேசம் நடக்கும்.

வந்து சேர்ந்த சிஷ்யனை முதலில் எந்த மட்டத்திலே இருக்கான்னு சோதித்து பார்க்கிறார். ¨பரவாயில்லை. வைராக்கியம் வந்துவிட்டது. ஆசை முதல் எல்லாத்தையும் கண்ட்ரோல்ல வெச்சு இருக்கான். ஞானத்துக்கு தீவிர நாட்டம் வந்துவிட்டது.¨ இப்படி கண்டுகொள்கிறார்.

முன்னே மீன், ஆமை, பறவை பற்றி சொன்னது போல இன்னும் ஒண்ணு குளவி. அதோட கூட்டுக்குள்ளே இருக்கிற அதன் லார்வா குளவியாக அது அடிக்கடி கூட்டின் பக்கத்திலே வந்து ஹெலிகாப்டர் போல் பறக்கும். அதன் அதிர்வு குளவிக்குஞ்சை முதிர்ச்சியாக்கும். அதுபோல குருவும் சிஷ்யனை இனம் பார்த்துக்கொண்டு உபதேசம் செய்கிறார். உடம்புதான் கூடு. உபதேசம் உள்ளே இருக்கிற ஜீவாத்மாவுக்குத்தான். குருவின் ரீங்காரத்தை கேட்டு கேட்டு அது முதிரணும்.

¨வா குழந்த. யார் தன்னோட உண்மையான சொரூபம் எதுன்னு மறந்ந்து போயிட்டாங்களோ அவங்கதான் திருப்பி திருப்பி பிறந்து கஷ்டப்படுவாங்க. எப்போ தான் யார்ன்னு ஞானத்தால புரிஞ்சுக்கிறாங்களோ அதுவரைக்கும்தான் இந்த கஷ்டம்.¨ அப்படிங்கிறார்.
18.
அடங்கிய விருத்தியானென் றறிந்தபின் செறிந்த மண்ணின்
குடம்பையுட் புழுமுன்னூங் குளவியின் கொள்கை போலத்
தொடங்கிய குருவுமான்ம சொரூபமே மருவவேண்டி
உடம்பினுட் சீவனைப்பார்த் துபதேச மோதுவாரே

அடங்கிய விருத்தியான் (இராகம் முதலான விருத்திகள் ஒடுங்கியவன்) என்று [சோதித்து] அறிந்த பின் செறிந்த (நெருங்கிய) மண்ணின் குடம்பையுள் (கூட்டுள்) புழு முன் ஊதும் (சப்திக்கும்) குளவியின் கொள்கை (தன்மை) போலத் தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவவேண்டி (அடையும் படி) உடம்பினுள் சீவனைப் பார்த்து உபதேசம் ஓதுவாரே.

19.
வாராயென்மகனே தன்னை மறந்தவன் பிறந்திறந்து
தீராதசுழற்காற் றுற்றசெத்தை போற்சுற்றிச் சுற்றி
பேராத காலநேமிப் பிரமையிற் றிவன்போதம்
ஆராயுந் தன்னைத்தா னென்றறியுமவ் வளவுதானே

வாராய் என் மகனே! தன்னை [உண்மைசொரூபத்தை] மறந்தவன் பிறந்து இறந்து, தீராத சுழற் காற்று உற்ற (அகப்பட்ட) செத்தை போல் சுற்றிச்சுற்றி பேராத (பெயராத) காலநேமி (காலச்சக்கரம்) பிரமையில் திரிவன். போதம் ஆராயும் (ஞானத்தால் அறியும்) தன்னை, தான் என்று அறியுமவ்வளவுதானே (அறியும் வரைக்கும்தானே).


4 comments:

Kavinaya said...

குளவி உதாரணமும் அருமை.

திவாண்ணா said...

:-)

Geetha Sambasivam said...

//குளவி உதாரணமும் அருமை.//

ஒரு ரிப்பீட்டேஏஏஏஏ போட்டுக்கறேன்!

திவாண்ணா said...

//ஒரு ரிப்பீட்டேஏஏஏஏ போட்டுக்கறேன்!//

//:-) //

நானும்தான்!