Pages

Tuesday, December 16, 2008

சமம் -தமம்




சாதாரணமா ஞான இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்த சொல்கிறோம். கர்ம இந்திரியங்களை இல்லை. ஏன்னா ஞான இந்திரியம் தூண்டிதான் கர்ம இந்திரியம் வேலை செய்யும்.

இந்த 5 ஞான இந்திரியங்கள் வழியா ஜீவன்கள் அழிவடையறதை முன்னேயே பாத்து இருக்கோம் இல்லையா? பக்தி பதிவுகள்ல விமோகம் பத்தி பாக்கிறப்ப.  (வி.சூ 76/8)

இருந்தாலும் விவேக சூடாமணில தமம் ன்னா என்னன்னு நிர்ணயம் செய்யறப்ப ரெண்டுமேதான் சொல்லி இருக்கார்.

விஷயேப்ய: பராவர்த்ய ஸ்தாபநம் ஸ்வஸ்வ கோளகே|
உபயேஷாம் இந்த்ரியாணாம் ஸ தம: பரிகீர்த்திதித:

அனுபோக வஸ்துக்களான விஷயங்களில் இருந்து இரண்டு வகை இந்த்ரியங்களையும் இழுத்து அதனதன் வட்டத்தில் நிலை நிறுத்துவது.
சரி அதென்ன வட்டம் மாவட்டம்?

தமம் என்கிறது ஒண்ணையுமே பாக்கக்கூடாது, ஒண்ணையுமே கேட்க்ககூடாது, வாசனை பாக்கக்கூடாது, ருசிக்கக்கூடாது - இப்படி இல்லை. கையை காலை ஆட்டி ஒரு வேலையும் செய்யக்கூடாதா?

ஒரேயடியா இந்திரியங்களோட வேலையை நிறுத்தினா! உயிர் வாழ உலக வியாபாரம் நடக்கணுமே! சரீர யாத்திரைக்கு தேவையான அளவு மட்டும் செய்யத்தான் வேண்டும். அத்தியாவசியமா பாக்க வேண்டியதை பாத்து, கேட்க வேண்டியதை கேட்டு, இப்படியே சாப்பிட்டு நடந்து இப்படி...

இந்த அத்தியாவசியம் என்ன என்பதைதான் வட்டம்ன்னு சொல்லி இருக்கார்.

மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலைப் பேணுவது கூட ஸாத்யமாகாது ன்னு ஏற்கெனவே கண்ணன் சொல்லி இருக்கானே!



+++++++++++++++++++++++++++++++++++
மனசு புலன்கள் எல்லாத்தையும் சேத்து 11 புலன்களாவும் சொல்கிறது உண்டு. ஏகாதச ருத்திரர்கள் என்று ஈசனுக்கு 11 வடிவங்கள் இருப்பது இந்த 11 புலன்களோட அதிதேவதைகளக்தான் என்றும் ஒரு சிலர் சொல்கிறர்களாம். ஏகாதசி பட்டினியும் இந்த 11 க்கும் தீனி போடாம வைக்கவே.
கண்ணனும் இந்த்ரியாணி மனஸாஸ்மி ன்னு மனசை ஒரு புலனாவே சொல்கிறான். (ப.கீ 10-22) இன்னும் தெளிவா மந: ஷஷ்டாநீந்திரியாணி (ப.கீ 15 -7) என்று 6 புலன்கள்ல மனசு ஒண்ணு என்கிறான்.

போகட்டும். சுருக்கமா சொல்லப்போனா மனசு அடக்கம், புலன்கள் அடக்கம் ரெண்டும் செய்ய வேண்டியது. இந்த ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்தாசை செஞ்சுக்கும். முன்னே சொன்ன மாதிரி மனசு இல்லாம புலன்கள் தானா ரொம்ப ஒண்ணும் ஓடாது. அப்ப புலன் அடக்கத்துக்கும் கருவி மனசுதான். புலன்களை மனசால் நியமித்து ன்னு கண்ணனும் சொல்லி இருக்கான். (ப.கீ 3-7) ச்ரத்தாவான் லபதே ஞானம் தத்பர: ஸம்யதேந்த்ரிய: ன்னு ச்ரத்தையோட கூட புலன்களை நல்லா அடக்கி இருக்கிறவனே ஞானம் பெறுவான் ன்னு கண்ணன் சொல்றான். (ப.கீ 4 -39)
++++++++++++++++++++++++++++++++++++
ஒரு ஆமை இருக்கு. அதை யாரோ துஷ்டன் பாத்துட்டான். தடி எடுத்து அடிக்கப்போறான். ஆமை என்ன செய்யும். அதால ஓடி ஒளிய முடியாதே! பகவான் அதுக்கு விசேஷமா ஒண்ணை கொடுத்து இருக்கான். அதோட ஓடு. ஆமை தன் தலையையும் கால்களையும் உள்ளே இழுத்துக்கும். அப்புறம் ஓடு மேலே என்ன அடி விழுந்தாலும் நிறையவே தாங்க முடியும் அதனல். பிறகு ஆபத்து போன் பின் வெளியே நீட்டும்.

அப்படி ஒத்தன் புலன்கள் விஷயத்துல இருந்து புலன்களை இழுத்துக்கணும்ன்னு ஸ்தித பிரக்ஞன் லட்சணம் சொல்கிறபோது கண்ணன் அழகா சொல்றான். (ப.கீ 2-58 )


2 comments:

jeevagv said...

//அப்படி ஒத்தன் புலன்கள் விஷயத்துல இருந்து புலன்களை இழுத்துக்கணும்ன்னு //
அருமை!

Geetha Sambasivam said...

புரிஞ்சுக்க முயற்சி செய்யறேன்.