Pages

Thursday, December 11, 2008

படிகள் -1




எல்லா சப்ஜெக்ட்லேயும் இருக்கிறது போல ஞானவழியிலேயும் தனி அகராதி உண்டு. ஞானத்தை பத்தி பேசுற நூல்கள் எல்லாமே சில வார்த்தைகளை பயன்படுத்தும். படிக்கிறவங்களுக்கு அது முதல்லேயே தெரிஞ்சு இருக்கணும் என்பது எதிர்பார்ப்பு. தெரிவது புரிதலை சுலபமாக்கும். அது இல்லாமலே முடியுமான்னு பாக்கலாம்.

அதனால பிஜி (PG) பாய்ண்டை தனியா தரப்போகிறேன். வேணும்னா படிக்கலாம். இல்லைனா விட்டுடலாம். பெரிய பிரச்சினை ஒண்ணும் இல்லை.

சரி, ஞான வழிகள்ல என்ன படிகள்? ஏற்கெனவே பாத்தாச்சு. இருந்தாலும் இப்ப கொஞ்சம் விரிவா பாக்கலாம்.
நித்ய அநித்ய வஸ்து விவேகம் முதலாவது.

இந்த பிரபஞ்சத்திலே எது நிலையா இருக்கக்கூடியது எது அழிஞ்சு போகக்கூடியது என்பதை பத்திய அறிவு. ஒரு அழிஞ்சு போகக்கூடிய விஷயத்தை எவ்வளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம், அழிஞ்சு போகாததுக்கு எவ்வளோ கஷ்டப்பட்டலாம்ன்னு நாம முடிவு செய்யலாம் இல்லையா?

நிலையா இருக்கக்கூடிய ஆன்மா, அதோட நம்மை சம்பந்தப்படுத்துற அதை உணர வழிவகை செய்யக்கூடியவற்றை தேடறதும் சம்பாதிக்கிறதும் செய்கிறவங்க புத்திசாலிங்க. அது கொடுக்கிற சந்தோஷம் எப்பவும் இருக்கும். நிலையா இல்லாதவைகளை தேடி சம்பாதிச்சா அவை நிச்சயமா ஒரு நாள் அழியும். அது நமக்கு துக்கத்தை தரும். துக்கம் இல்லாமல் இருக்க நித்திய வஸ்துவைதான் தேடி சம்பாதிக்க வேண்டும்.

**** இதை த்ருக்கு த்ருஷ்ய விவேகம் ன்னும் சொல்வாங்க. அந்த பேர்ல ஒரு புத்தகமே இருக்கு. த்ருக்கு என்பதுக்கு பேர் கிடையாது. வடிவம் கிடையாது. எப்பவும் இருக்கும். அதாவது ப்ரம்மம். சத்தசித் ஆனந்தமா இருக்கிற ஆன்மா. த்ருஷ்யம் என்கிறது நாம் பாத்து பெயர் வெச்சு கூப்பிடக்கூடியவைகள்.***

இரண்டாவதா இகபர விராகம்.

இகம்? இந்த உலக வாழ்க்கை. பரம் - அடுத்த உலக வாழ்க்கை. அது சுவர்க்கமோ, நரகமோ, வேற ஏதோ....இந்த உலக சமாசாரங்களை சம்பாதிப்பதில் கஷ்டமும் அனுபவிப்பதும் தற்காலிகமாகவும் இருக்கு. ஆசை ஆசையா சேர்த்து வைக்கிறவங்க அதை அனுபவிக்கவும் கொடுத்து வெச்சு இருக்க வேண்டி இருக்கு. சேத்ததை பத்திரப்படுத்த வேற வேண்டி இருக்கு. களவு போயிடுமோன்னு பயம். ஒண்ணுமில்லாத ஆசாமி நிம்மதியா தூங்க பொருள் சேத்த ஆசாமிக்கு பல பிரச்சினைகளாள தூக்கம் வரதில்லை. அனுபவிப்போம் ன்னு நினைக்கிற ஆசாமி அனுபவிக்கக்கூடடிய காலம் வரப்ப காலனே வந்துறதும் உண்டு. அப்ப சேத்ததிலே ஒரு சின்ன கர்சீப்பாவது எடுத்து போக முடியுதா?

சரிப்பா நான் நிறைய நல்ல காரியம் செய்யறேன்! பூஜை, ஹோமம், யாகம் எல்லாம் செஞ்சு புண்ணியம் சம்பாதிக்கிறேன். யாகங்கள் செய்து தேவனாகிடறேன். அப்ப என்ன செய்வீங்க, அப்ப என்ன செய்வீங்கன்னு கேட்டா.....

சுவர்கத்திலே எல்லாமே நல்லா இருக்கும். மீமாம்சை படி சுவர்கத்தோட வரையரையே துக்கம் இல்லாத சுக அனுபவம், என்றும் அழியாதது, விரும்பியது கிடைக்கும். அப்படிப்பட்ட இடம்தான். ஆனா தேவலோகம் அப்படி இல்லியே.
அது நிரந்தரமும் இல்லை. செய்த கர்மாக்களுக்கு தகுந்தபடி அனுபவிச்சுட்டு திருப்பி இங்கேதான் வந்தாகணும்.
இந்திரனா இருந்தாக்கூட அசுரர்களால அப்பப்ப தொல்லை. ஓடறான் ஒளியறான். மஹரிஷிகள்கிட்ட அபராதம் பண்ணி, சாபம் வாங்கி, கஷ்டமும் பட்டதா படிக்கிறோமே! எங்கே காமம், கோபம் எல்லாம் இருக்கோ அங்க துக்கமும் இருக்கும். தேவர்களுக்கு அது எல்லாம் உண்டு.

சரி, நான் தேவலோகம் போகாம சுவர்க்கம் போறேன்னாலும் சுகம் அனுபவிச்சு முடிஞ்சு திருப்பி பூமிக்கு அனுப்பிடுவாங்க. ¨தந்தனத்தோம் என்று சொல்லியே...¨ அப்படின்னு திருப்பி இந்த வாழ்க்கை ஆரம்பிச்சுடும். இந்த உலக வாழ்க்கை இரும்பு விலங்குன்னா தேவலோக வாழ்க்கை பொன் விலங்கு என்கிறாங்க. இரும்பானாலும் தங்கமானாலும் விலங்கு விலங்குதானே. பெயரும் உருவமும் இருக்கிற எந்த ஜன்மமானாலும் அதில் துக்கம் இருக்கும்.

அதனால இந்த உலக வாழ்க்கை, மேல் உலக வாழ்க்கை இரண்டிலுமே பற்றை நீக்க வேண்டியதுதான். என் உறவினர் ஒத்தர். நாக்கு சபலம் அதிகம். ஆனா வயிறு ஒத்துழைக்காது. இவரோ நல்ல விருந்துனா சபலப்பட்டுகொண்டு நல்லா ஒரு பிடி பிடிப்பார். ஜீரண சக்தி இல்லாததாலே கொஞ்ச நேரத்தில வயித்து வலி வந்து, வாந்தி எடுத்துதான் சரியாகும். ஆசை ஆசையா சாப்பிட்ட லட்டு வடையெல்லாம் அப்படியே வந்துடும். அதை இப்ப பாத்தா ஆசையா வரும்? வெறுத்து ஒதுக்குவார் இல்லியா? அது போல திருப்பி திருப்பி நாம் அனுபவிச்ச இந்த இரண்டு லோகங்கள் மேல இருக்கிற பற்றையும் விடணும்.

**** கிடைக்கிறது யோகம். கிடைச்சதை அனுபவிக்கிறது க்ஷேமம். ரெண்டும் வேற வேற. நிறைய லட்டு கிடைக்கலாம். அது யோகம். அதை சாப்பிட சக்கரை வியாதி இல்லாம இருக்கணுமே. அல்லது களவு போகாம இருக்கணும். இப்படி தடைகளை தாண்டி அனுபவிச்சா க்ஷேமம் இருக்குன்னு சொல்லலாம்!****

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இது, இது தான் ஆரம்பம்...:-)

Kavinaya said...

எனக்கே புரியற மாதிரி இருக்கே :)

//பார்வையிடுவோர்...... (6)//

இப்படிச் சொல்லீட்டிங்களே. நாங்கள்லாம் படிக்கிறோமாக்கும்! :)

Geetha Sambasivam said...

mmmm???தேவலோகம், சுவர்கம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் எடுத்துச் சொல்லி இருக்கலாமோ???

லட்டு உதாரணம் நல்லா மனசிலே பதியறாப் போல் இருக்கு! ஒருவேளை லட்டு எனக்குப் பிடிக்கும்கிறதாலேயோ?? :P:P:P:P