Pages

Thursday, November 20, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 20



அர்ஜுந உவாச।
அத கேந ப்ரயுக்தோ அயம் பாபம் சரதி பூருஷ:।
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:॥ 3.36 ॥
தீவினைதான் ஓர் புருடன் செய்ய விருப்பிலனாய்
மேவினுமென் அவ்வினையை வெவ்வலியால் - ஏவப்
படுத்தகையன் போலியற்றல் பாரளந்து கொண்ட
நெடுந்தகையாய் ஈது நிகழ்த்து


 தீவினைதான் ஓர் புருடன் செய்ய விருப்பிலனாய் மேவினும் என், அவ்வினையை வெவ்வலியால் - ஏவப் படுத்தகையன் போல் இயற்றல் பார் அளந்து கொண்ட நெடுந்தகையாய் ஈது நிகழ்த்து.

(அர்ஜூனன் கூறினார்: 'க்ருஷ்ண! பின் இந்த மனிதன் தான் விரும்பாவிட்டாலும் பலவந்தமாகத் தூண்டப்பட்டவன்போல எதனால் ஏவப்பட்டுப் பாவத்தைச் செய்கிறான்?)

என்னை முக்கிய கர்த்தான்னு நினைன்னுதானே சொன்னே? எல்லாரும் நீயே தூண்டி செயல் செய்வதானா பாவ காரியங்கள் நடக்காதே? ஆனாலும் ஏன் மனுஷன் பாவம் செய்யறான்? அப்படி யாரும் பாவம் வேணும்னு ஆசையோட பாவத்தை செய்கிற மாதிரியும் தெரியலையே? அப்ப ஏதோ ஒண்ணு வலுக்கட்டாயமா அவனை இப்படி செய்ய வைக்குதே? அது என்ன?

 இப்படி கேட்கிறான் அர்ஜுனன்.

அக்ரூரர் கேட்க்கிறாராம் "ஏம்பா திருதராஷ்ட்ரா, உனக்கு 105 பிள்ளைகள் ன்னு ஏன் நினைக்கக்கூடாது?” பதில் வந்தது "உன்னை அனுப்பினவன்தான் இப்படிப்பட்ட புத்தியும் கொடுத்தான்.” :-)

 ஏன் கொலை செய்கிறான்? கோபத்தால. ஏன் திருடினான்? காமத்தாலே? காரணம் உடனே தெரியறதே?

ஸ்ரீபகவாநுவாச।
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:।
மஹாஷநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்॥ 3.37 ॥

ஏதுவினைச் செப்பின் இராசத்தால் உற்றதொரு
தீதறுவெங் காமம் சினமுமது - யாதினையும்
உண்மடுப்ப தைய ஒழியாத பாவமுமாம்
எண்மதியீ தைப்பகையென் றீங்கு


ஏதுவினைச் செப்பின் இராசத்தால் உற்றதொரு தீது அறு வெங்காமம் சினமும் அது - யாதினையும் உண் மடுப்பதைய ஒழியாத பாவமுமாம் எண்மதி ஈதைப் பகை என்று ஈங்கு.



(ஸ்ரீ பகவான் கூறினார்: ரஜோ குணத்திலிருந்து உண்டாகிய இந்த காமம்தான் கோபமாகும். இது பெருந்தீனிக்காரன். போகங்களில் 'போதும்' என்ற எண்ணமில்லாதவன். மேலும் பெரிய பாவி. இதையே இந்த விஷயத்தில் பகைவனாக அறிந்து கொள்.)

மனுஷனுக்கு இருக்கிற காமமும் அதிலேந்து வருகிற கோபமும்தான் இதுக்கு காரணம்.

இப்படி சிலர் சொல்லலாம். ஆசையை முழுக்க ஒழிக்க முடியாது. கொஞ்சம் அதுக்கும் தீனி போடணும்தான்.

ஆசையை முழுக்க உடனே ஒழிக்க முடியாதுதான். ஆனால் அதுக்கு தீனி போட்டு அடக்கிடலாம் ன்னு நினைக்கிறது தப்பு. ஒத்தர் 5000 ரூபாய் சம்பாதிக்கிறார். இன்னும் ஒரு 1000 கூட சம்பாதிச்சா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறார். அப்படியே ஏதோ ஒரு வழில கொஞ்சம் கூடுதலா வருமானம் வந்து அந்த ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதுன்னு வெச்சுக்கலாம். அப்ப அவருக்கு திருப்தி வரணும் இல்லையா? அப்படி சாதாரணமா நடக்கிறது இல்லை. இன்னும் ஒரு 2000 கிடைச்சால் பரவாயில்லையேன்னு தோணும். இதுக்கு ஒரு எல்லையே கிடையாது. நெருப்பிலே தீனி போடப்போட அது வளந்துகொண்டே போகிற மாதிரி காமம் வளந்து கொண்டேதான் போகும்.

இந்த காமத்திலேந்து பிடித்தது விலகிடுமோ இல்லை பிடிக்காதது நடந்துவிடுமோ என்கிற பயமே கோபமாக வெளிப்படும். அதாவது காமமேதான் இன்னொரு வேஷம் போட்டுக்கொண்டு கோபமா வருது.

2 comments:

Kavinaya said...

ஒரு விஷயத்து மேல ஆசை வந்துட்டாலே அதைத் தொடர்ந்து கவலையும் துன்பமும் கூடவே வந்துரும் போல...

திவாண்ணா said...

மிகச்சரியா சொன்னீங்க!