Pages

Thursday, September 25, 2008

பிறப்பால் கர்மா -2



வைச்ய தர்மம்.

பசுக்களை பரிபாலித்தல், தானம், யாகம், அத்யயனம் இவற்றை செய்தல்; தரையிலும் நீரிலும் யாத்திரை செய்து வியாபாரம், வட்டிக்கு கடன் கொடுத்தல், விவசாயம் இவை வைச்யர்களுக்கான விருத்திகள். (மனு)

பராசரர் ரத்தின பரீட்சை என்று ஒண்ணு சேத்துக்கிறார்.

மனு மேலே சொல்கிறார்: முத்துக்கள், பவழங்கள், உலோகங்கள், துணிகள் வாசனை பொருட்கள், ரஸ பொருட்கள் இவற்றோட தார தம்மியம் தெரியணும். விதைகள் விதைக்கும் விதிகள், மண்ணின் குண குற்றங்கள், அளவிடும் முறைகள் தெரியணும். சரக்குகளின் உயர்வு தாழ்வுகள், தேசங்களின் குண தோஷங்கள், சரக்குகளின் லாப நஷ்டங்கள், பசுக்களை விருத்தி செய்யும் முறைகள் தெரியணும். ஊழியர்களுக்கு உரிய சம்பளம் கொடுத்தல், மனிதர்களின் மொழிகள், சரக்குகளை காப்பாற்றும் விதம், அவற்றுடன் சேர்க்கக்கூடிய பொருட்கள், வாங்கல்- விற்றல் இதெல்லாம் தெரியணும். இப்படி பணம் சேர்க்க நல்லமுயற்சிகள் செய்யணும். சேர்த்ததை தாராளமா எல்லா பிராணிகளுக்கும் தானம் செய்யணும்.
சூத்திர தர்மம்: மற்ற மூன்று வர்ணத்தவருக்கான வேலையை செய்வதே இவர்கள் தர்மம். ஆங்கிலத்தில் லெக்வொர்க் என்கிறார்களே அது. அதற்கு தகுந்த உடல் வலிமையும் சக்தியும் இவர்களுக்குத்தான் இருக்கு.

இப்படி செய்ய வேலை கிடைக்கலை/ விருப்பமில்லை என்றால் சில பொருட்களை வியாபாரம் செய்யலாம்: உப்பு, தேன், தைலம், தயிர், மோர், நெய், பால் இதெல்லாம் வியாபாரம் செய்யலாம். ஆனாலும் மது, மாமிசம் இவற்றை வியாபாரம் செய்யலாகாது.

இப்படி வேலை செய்து கொண்டு, மிருதுவான வார்த்தைகளுடனும், அகங்காரம் இல்லாமலும் இருப்பவர் உயர் நிலையடைவார்கள்.

இவர்களுக்கு மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் இல்லை. பூண்டு முதலியன சாப்பிடுவதால் பாபமில்லை. உபநயனம் முதலிய சம்ஸ்காரங்களுக்கு தேவையும் இல்லை; அதிகாரமும் இல்லை.

தர்மத்தை அறிந்தவர்களும், தர்மம் செய்ய விரும்புவர்களுமான சூத்திரர் மந்திரங்களை தவிர்த்து நமஹ என்று பாக யக்ஞங்களை செய்தால் பாபமடைய மாட்டார்கள். அதாவது அக்னயே ஸ்வாஹா என செய்வதற்கு பதில் அக்னயே நமஹ என்று ஹோமம். பும்சவனம் முதல் சௌளம் வரையான சம்ஸ்காரங்கள் அந்தந்த காலத்தில் செய்ய வேண்டும்.

தேவலர் கூடுதலாக, உழவு, பசுபாலனம், சுமை தூக்குதல்,வியாபாரம், சித்திரம் எழுதுதல், சில்பங்கள் வடித்தல், நடனம், பாட்டு, வாத்தியங்களை வாசித்தல் இவற்றையும் தர்மமாக சொல்கிறார்.

இவர்கள் அதிகமாக தனம் சேகரிக்கக்கூடாது. யாரை அண்டி இருக்கிறார்களோ அவர்கள் சூத்திரரை வயதாகி வேலை செய்ய முடியாத காலத்திலும் சம்ரக்ஷிக்க வேண்டும். ஒரு வேளை சம்ரக்ஷித்தவர் க்ஷீண திசையடைந்தால் சூத்திரர் அவரிடம் பெற்ற தனத்தால் அவருக்கு உதவி செய்யலாம்.

தர்மம் தவறுபவர்களுக்கு கடுமையான பிராயச்சித்தங்களும் சொல்லி இருக்கு.

3 comments:

geethasmbsvm6 said...

பிரசண்ட் சார்!

geethasmbsvm6 said...

பழைய பாடங்களுக்கும் சேர்த்து!

மெளலி (மதுரையம்பதி) said...

நானும் உள்ளேனய்யா போட்டுக்கறேன் :)