Pages

Friday, September 19, 2008

சிராத்தம் -நியமங்கள்



சிராத்தம் வருகிற மாசத்திலோ பட்சத்திலோ சவரம் செய்து கொள்ளுதல், வேறு வீடுகளில் சாப்பிடுதல், ஸ்திரீ ஸங்கம் இவற்றை தியாகம் செய்ய வேண்டும்.
பசும் சாணத்தால் சிராத்தம் செய்யும் பூமியை மெழுகி எள்ளை இறைக்க வேண்டும்.
உளுந்து இல்லாமல் சிராத்தம் செய்யப்பட்டதாகாது. தேனை பித்ருக்கள் விரும்புகிறார்கள்.

சுருக்கமாக சிராத்த விஷயம்:
1. 12 நாழிகைக்கு மேல் (ஒரு நாள் = 60 நாழிகை. 12 நா = காலை 11 மணி) ப்ராம்மணர்களுக்கு ஸ்னானத்துக்கு தைலம் சூர்ணம் முதலியன கொடுக்க வேண்டும். அவர்கள் குளித்த பின் கர்த்தாவும் குளிப்பார். துவாதசியானால் நெல்லி சூர்ணம் கொடுக்க வேண்டும்.
2. ஆவாஹனம், அர்க்யம், சங்கல்பம், பிண்ட தானம், எள்நீர் கொடுத்தல், ஆசனம், பாத்யம், அன்னதானம் இவற்றில் நாம கோத்திரங்களை சொல்ல வேண்டும்.
3. தேவர்களின் ஆவாஹனத்தில் இரண்டு பாதங்கள், முழங்கால்கள், தோள்கள் தலை இவற்றில் அக்ஷதை போடவும்.
4. பித்ருக்கள் ஆவாஹனத்தில் தலை தோள்கள், முழங்கால்கள் என இறங்கு வரிசையில் எள்ளை போடவும்.
5. வீண் பேச்சு கூடாது.
6. தேவர்களுக்கு கட்டை விரலை பிடிக்காமலும் பித்ருக்களுக்கு பிடித்தும் மந்திரம் சொல்வர்.
7. சமையலின் குற்றங்களை சொல்லகூடாது

இவை போல பல உண்டு.

பித்ருக்களை வஸுக்களாயும், தாத்தாவை ருத்திரர்களாயும், அவருடைய அப்பாவை ஆதித்யர்களாயும் வேதம் சொல்லுகிறது.
ஒரு வேளை மற்ற புண்ய காலங்களில் (96) சிராத்தம் செய்ய முடியாவிட்டால் ஆம ரூபமாக, ஹிரண்ய ரூபமாக (அந்தணர்களுக்கு தக்ஷிணையாக) கொடுத்து செய்யலாம். சக்தி இல்லாதவன் பசுக்களுக்கு ஒரு நாளுக்கு போதுமான புல்லை போடலாம். பிண்டங்கள் போடலாம். தில (எள்) தர்ப்பணம் செய்யலாம்.

யார் சிராத்தம் செய்ய முடியாமல் - சக்தி இல்லாமல் இருக்கிறானோ அவன் அதற்கு பிரதிநிதியாக என்ன உள்ளது என்று பார்த்து அதை செய்தால் முக்கியமாக செய்ய வேண்டியபடி செய்த பலன் கிடைக்கிறது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

யார் சிரத்தையுடன் பித்ருக்களையும் அக்னியையும், தேவர்களையும் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா பிராணிகளுக்கும் உள்ளிருக்கும் இறைவனை பூஜிக்கிறார்கள். ஆயுள், புத்திரர்கள், புகழ், சுவர்க்கம், யசஸ், புஷ்டி, பலம், பாக்கியம், பசுக்கள், சுகம், தனம், தான்யம் இவற்றை அடைகிறார்கள்.
ஆகவே கிருஹஸ்தன் சிராத்தத்தை சரியாக செய்ய வேண்டும்.

இத்துடன் 40 சம்ஸ்காரங்கள் குறித்த பதிவுகள் முடிந்தன.
அடுத்து காம்ய கர்மாவை கொஞ்சமாக பார்த்துவிட்டு பொதுவாக கர்மா குறித்து பார்க்கலாம்.


5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

மஹாலய சிராத்தம் தினமும் தில தர்பண ரூபமாக நடக்கிறது. ஹோமம் இந்த வருஷம் (ஆப்திகம் ஆகாததால்) பண்ண வேண்டாமென குரு சொல்லியதால் மஹா பரணியன்று ஹிரண்யமாக பண்ணினேன்.

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
திவாண்ணா said...

அட இன்னும் ஆப்திகம் ஆகலையா? மாளய பட்சத்துல தில தர்பணம் செய்வது தினசரி செய்வது குறித்து ரொம்பவே சந்தோஷம்!

மெளலி (மதுரையம்பதி) said...

முன்பே சொன்னது தான் திவாண்ணா, இந்த 16 நாட்கள் செய்வதில் ஏற்படும் அனுபவத்தை அடிப்படையாக வைத்து 96 நாட்கள் செய்ய முடிவு. :)