Pages

Friday, September 12, 2008

பதினோராம் நாள்


பதினோராம் நாள்

பகலில் வீட்டை பசுஞ்சாணத்தால் மெழுகி துணிகளை வண்ணானால் சுத்தம் செய்து வாங்கி;

பகலின் இரண்டாம் பாகத்தில் குளித்து வீட்டு/ ஆத்ம சுத்திக்காக புண்யாஹம் செய்து வீட்டுப்பொருள்களை புனித நீர் தெளித்து நவ சிராத்தம் செய்து வ்ருஷோத்சர்கம் செய்ய வேண்டும். இத பத்தி ஏற்கெனவே பார்த்து இருக்கோம் இல்லையா? அப்ப செய்யாது போனால் இப்போது இறந்தவருக்காக கர்த்தா செய்வார்.

http://anmikam4dumbme.blogspot.com/2008/07/blog-post_17.html

இப்படி செய்ய முடியாதவர்கள் 11 அந்தணர்களுக்கு அன்னத்துக்கு அரிசி தானம் செய்ய சொல்கிறார்கள். ஒரு வேளை ஏதும் ஒரு காரணத்தால் இது இப்போது செய்ய முடியாவிட்டால் 12, 23, 27 நாட்களில் செய்ய சொல்லி இருக்கிறது.

மாட்டுத்தொழுவத்தில் ஹோமத்துக்கு தயார் செய்து கொண்டு; தானியத்தின் மீது கும்பம் ஸ்தாபித்து ருத்திரனை ஆவாஹம் செய்து பூசிப்பர். ஹோமம் செய்ய சரு மாவு. இதற்கான மந்திரங்களில் பல "கோ சூக்தம்" என்ற வடிவில் (உதக சாந்தியில்) உள்ளது. பின் ருத்திர ஹோமம். பின் காளையை நிறுத்தி பூசித்து; 11 அந்தணர்களை வரித்து 11 முறை ருத்திர ஜபம். (குறைந்தது ஒரு முறை) காளையை அலங்கரித்து அதையும் அக்னியையும் சேர்த்து வலம் வந்து மந்திரம் சொல்லி எள் கலந்த நீரை பருக வைப்பர். வலது முன் காலின் அடியில் லிங்கம் அல்லது சங்கு சின்னம் மஞ்சளால் செய்து வலது காதில், இடது காதில் மந்திரம் சொல்லி பின் பசுக்களிடையே சுதந்திரமாக அதை விட்டு விடுவர். அது போகும் போதும், போன பின்னும் அதை நோக்கி மந்திரம், பிரார்த்தனை உண்டு.

இதில் நடந்து இருக்கக்கூடிய குற்றங்களுக்கு எள், துணி, பணம், நீர்குடம், பசுமாடு தானம் செய்வர். (பசுவுக்கு பதில் மட்டை தேங்காயும் பயனாவது உண்டு.)
பின் ருத்திர பலி தருவதுடன் ஹோமமும் காரியமும் பூர்த்தி ஆகிறது.


No comments: