Pages

Monday, September 29, 2008

கர்ம வழி-பொது 1



காக்காவுக்கும் குருவிக்கும் கல்யாணம், ..கெட்டி மேளம் கோவில்ல, வெத்திலை பாக்கு கடையில ன்னு பாடினா மாதிரி...

பகவத் கீதை வெண்பா அழகிய மணவாளருடையது...
கீதை உரை பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட பகவத்கீதை உண்மையுருவில் என்ற புத்தகத்திலிருந்து... இதை கடுகு.காம் இலிருந்து சுட்டு இருக்கேன். (நிறைய நகைச்சுவை கதை கட்டுரைகள் எழுதினவரா இவர்?)...
சில விஷயங்கள் வேளுக்குடியாரின் பிரவசனங்களில் இருந்து...
சிலது என் தங்கமணியோட பேசினது....
சிலது என் அருமை புத்திரன் விளக்கம் கொடுத்தது...

எல்லாருக்கும் நன்றி.
~~~~~~~~~~~~
பொதுவாக ஒருவருடைய வேலையை பத்தி இப்ப பாக்கலாம்.
வர்ணத்துக்குன்னு கார்யங்கள் சொன்னாலும் இந்த கால கட்டத்துல நம்மை பகவான் ஏதோ ஒரு வேலைல கொண்டு வெச்சு இருக்கான். அது அவங்க அவங்க தர்மத்துக்கு விரோதமா இல்லையா என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும்.

எந்த வேலைல இருந்தாலும் சில விஷயங்களை கடைபிடிச்சா அது கர்ம யோகமா ஆயிடும்.
கர்ம யோகம்னா உடனே பலருக்கும் நினைவுக்கு வரது பகவத் கீதைதான். அதை அடிப்படையா வெச்சே மேலே பாத்துகிட்டு போகலாம்.

எல்லாருக்கும் தெரிஞ்ச ஆனால் பலரும் தப்பா புரிஞ்சுகிட்ட ஸ்லோகம் 2 ஆம் அத்தியாயத்தில வர 47 ஆம் ஸ்லோகம் "கர்மண்யேவாதிகாரஸ்தே" என்பதுதான். இதை ஆரம்பத்திலேயே பாத்தாச்சு.

ஆமாங்க, வழி 2, 2-

இப்ப கொஞ்சம் விரிவா பாக்கலாம்.

கீதை 2:47

கருமத்தே யுன்ற னதிகாரங் கண்டாய்
வருமப் பயனிலணு மன்னா-தொருமித்து
மற்றதனுக் கேதுவா மன்னேல் கருமமலா
வெற்றமைவில் வேண்டா விருப்பு

விதிக்கப்பட்ட கடமையைச் செய்வதில் மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது. செயலின் பலனில் அதிகாரம் இல்லை. இருப்பதாகவும் எண்ணாதே. செயலற்ற நிலையையும் விரும்பாதே. வெற்றி, தோல்விகளை எண்ணாமல் நடுநிலையுடன் செயல்படு. இத்தகைய மனநிலையே யோகம் எனப்படும்.

காரியம் செய்வதிலதான் உனக்கு அதிகாரம் - ரைட்ஸ்- இருக்கு. அதை செஞ்சா என்ன ஆகும் என்பதில உனக்கு ரைட்ஸ் இல்லை.
எந்த பயனிலும் ஆசை வைக்காதேன்னும் சொல்லலை. அடுத்து வர ஸ்லோகங்களை பாத்தா இது புரியும். ஆத்மாவை உணந்து கொண்டு பிரம்மத்தை அடைய பலனைத்தவிர கீழான விஷயங்களில் ஆசை கூடாது.
பலனை பெறும்போது இது நான் செய்ததால கிடச்சது என்று நினைக்காதே.
ஏன்?
நாம் மட்டுமே விளைவை நிர்ணயிப்பது இல்லை.
சாஸ்திரங்கள் என்ன சொல்லுதாம்? ஒரு காரியம் நடக்க 5 விஷயம் வேலை செய்யுதாம். 1. பரமாத்மா 2. ஜீவாத்மா 3. உடல் 4. இந்திரியங்கள் 5. பிராணன்.
என்னதான் பெரிசா திட்டம் போட்டாலும் அது பகவானோட திட்டத்துக்கு பொருந்தாட்டா அதை செய்ய முடியாது.
ஊருக்கு போய் ஒரு இடத்திலே பேசணும். நான் நினைச்சேன். ஆனா திடீர்ன்னு சுரம் வந்ததால போகவே முடியலை. இப்படி உடல் ஒத்துழைக்கலை.
போனேன், போகிற வழில குளிர் காத்து, தொண்டை கட்டிக்கொண்டது. பேச்சே வரலை.
இப்படி பலவிதமா தடங்கல்கள் ஏற்படலாம். அதை எல்லாம் தாண்டி வேலை நடந்தா அதில முழு காரணம் நாம் ன்னு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லை.

சாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு?

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதோ புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு திவாண்ணா...சொல்ல தெரியல்ல.

திவாண்ணா said...

போஸ்ட் பெரிசா போனதால ட்ரன்கேட் ஆயிடுத்து. முழுசா படிச்சா புரியும்ன்னு நினைக்கிறேன். சொல்ல வந்த விஷயம் இன்னும் முழுசா சொல்லலை.

:-(