Pages

Wednesday, July 2, 2008

சாப்பிடக்கூடியவை கூடாதவை:


சாப்பிடக்கூடியவை கூடாதவை:
இதைப்பத்தி முன்னேயே பாத்து இருக்கோம்.
http://anmikam4dumbme.blogspot.com/2008/04/blog-post_17.html

ஜாதியினால் சில உணவு வகைகள் நல்லது இல்லை. சில அவை செய்யும் காரியத்தால் நல்லது இல்லை. சிலது காலத்தினால்; சிலது சேர்க்கையினால்; சிலது சஹ்ருல்லேகம்; சில சுபாவத்தால்; இப்படி பலதும் உண்ண தகுதியை இழக்கின்றன.

வெங்காயம், சிவப்பு முருங்கை, உள்ளிப்பூண்டு, பலாண்டு, நாய்க்குடை, தாமரை தண்டு, சுரைக்காய் இவை ஜாதியால் உண்ண தகுந்தவை இல்லை. அதாவது allium cepa family முழுக்க உண்ண தகுந்தது இல்லை. இப்படி.

கெட்ட எண்ணங்களோட ஒருவர் உணவை பார்த்தாலே அது காரியத்தால கெடுகிறதாம்.
நெய், எண்ணை முதலியனவால செய்த பலகாரங்கள் ரொம்ப நாள் வைத்திருந்தா கெட்டு போகும். பழைய சோறும் அப்படிதான். தயிர், தேன், பக்ஷணங்கள் இதெல்லாம் காலத்தால கெட்டு போகா.

கள்ளு, வெங்காயம் இதெல்லாம் சேர்த்தவை; சீமப்பால் கலந்தது (அதாவது கன்று போட்டு 10 நாளுக்குள்ள கறக்கிற பால்) இதெல்லாம் சேர்க்கையால் கெட்டவை.
எப்பவாவது இதை சாப்பிடலாமா கூடாதான்னு சந்தேகம் வந்தா அது ஸஹ்ருல்லேகம் என்கிறாங்க. இந்த "சந்தேக பிரியாணி" எல்லாம் சாப்பிடக்கூடாது.

பராசரர் இந்த பட்டியல்ல வெளுப்பு கத்தரி, மரத்தின் பிசின், (இதுல பெருங்காயம் வந்துடும்) கோவில் சொத்து, ஒட்டக/ ஆட்டு பால் இதெல்லாம் சேத்து, தெரியாத்தனமா இதெல்லாம் சாப்பிட்டாக்கூட பிராயசித்தம் செய்யணும் என்கிறார்.

தேவலர் மரப்பிசின்ல பெருங்காயத்துக்கு எக்ஸெப்ஷன் தரார்.

யவை/ கோதுமையால செஞ்சதுக்கு காலம் கடந்தது என்கிற குற்றம் இல்லையாம். ( அப்ப சப்பாத்தி ரொட்டி எல்லாம் பரவாயில்லை.)

தயிர் தவிர புளிச்சது எதுவும் சாப்பிடக்கூடாது. (யப்பாடா எவ்ளோ தரம் இதை தட்டறது? பரவாயில்லைன்னு சா.கூ வே எழுதறேன்.!) ஆபத் தர்மமா வேற சோறு கிடைக்காத போது புளிச்சதை தண்ணீரால அலம்பி சாப்பிடலாம்.
புளிப்பு இஞ்சி, தயிர், கஞ்சி, எள்ளு, சாதம்(!), நெல்லிக்காய் இதெல்லாம் ராத்திரியில் சா.கூ.

சில விஷயங்கள் ஒண்ணா சேந்தா கெட்டு போகும். வெண்கல பாத்திரம் + இளநீர்/ கருப்பஞ்சாறு; தாமிர பாத்திரம்+ தயிர்,பால்; உப்பு + பால்/நெய் இதெல்லாம் கெட்டு போகிற சேர்க்கைகள். (பல கோவில்களிலேயும் தெரியாத்தனமா காப்பர் சொம்பில பால் எடுத்து அபிஷேகம் நடக்குது)

என்னயா இது? கூடாது கூடாதுன்னு எல்லாம் சொன்னா எப்படி? கூடும்ன்னு சொல்லுங்கிறீங்க. சரி சரி.

அகத்தி, துளசி, நெல்லி, சுண்டைக்காய் அவை யாரோட வயத்தில இருக்கோ அவனுக்கு ஹரி பக்கத்தில இருக்காராம். யார் சாப்பாடு, பக்ஷணம், லேஹ்யம் எல்லாத்தையும் நமோ நாரயணான்னு சொல்லி தொட்டு சாப்பிடரானோ அவன் நல்ல லோகத்த அடைகிறானாம்.
நாராயண!

இந்த பட்டியல்ல பலதும் நமக்கு பிடிச்சவையா இருக்கலாம். அதனால அதுக்கெல்லாம் "அதுக்கு மருத்துவ குணம் இருக்கு" என்பது போல வக்காலத்து வாங்க வேண்டாம். சாப்பிடலாமா வேண்டாமான்னு அவரவர் முடிவு செஞ்சுக்கலாம்.- இந்த பதிவுகள்ல வர மத்த விஷயங்கள் போலவே!

ரெண்டு வருஷம் முன்னால வேத வகுப்புகள் எடுக்கிறப்ப வகுப்புல தர்ம சாஸ்திரமும் பாத்துகிட்டே போவோம். இதே விஷயம் வந்தது. சா.கூ பட்டியலை படிச்சுகிட்டே போனோம். ஒருத்தர் "சரிதான் சரிதான்"னு எல்லாத்துக்கும் தலையாட்டிகிட்டே வந்தார். வெங்காயம்ன்னு சொன்னவுடனே சுரு சுருன்னு கோபம் வந்துட்டது. அதெப்படி சொல்லலாம், அதுக்கு மருத்துவ குணம் இருக்குன்னு சண்டைக்கு வந்துட்டார்!
ஏன்? முன்ன சொன்னதெல்லாம் அவர் சாப்பிறதில்லை. வெங்காயம் ரொம்ப பிடிக்கும்! அவ்ளோதான். :-))


7 comments:

Kavinaya said...

ஹ்ம்.. வெங்காயமும் பெருங்காயமும் சேர்க்காம இக்காயத்துக்கு இக்காலத்துல சாப்பாடு போடறது கஷ்டம்னு தோணுது :( இருந்தாலும் முயற்சிக்கலாம். கீரைகூட ராத்திரியில சா.கூ.ன்னு சொல்வாங்க. எதுக்கும் எப்பவும் நமோநாராயண சொல்லிடுவோம் :)

ambi said...

ம்ம், வெங்காயம் இப்ப நிறைய சேர்கறதில்லை.

எதுக்கும் இனிமே எல்லாத்துக்கும் ஓம் நமோ நாராயணாய! தான். பிறவி கடலில் தான் ஏற்கனவே தத்தளிச்சுட்டு தானே இருக்கோம், தனியா யாரும் தூக்கி போட தேவையில்லை. :))

geethasmbsvm6 said...

இப்போ காயெல்லாம் விக்கிற விலையில் எந்தக் காயும் வேண்டாம்னாக் கூடச் சரிதான்!! :((((((

திவாண்ணா said...

எல்லா மருத்துவர்களும் அதிகமா காய்கறி சாப்பிடுன்னு சொல்கிறாங்க. நீங்க வேற! வீட்டுல தோட்டம் போட்டு காய்கறி வளர்க்கிற பழக்கம் போயிடுச்சோ?

மெளலி (மதுரையம்பதி) said...

சுரக்காய் கடைகளில் பார்த்ததுதான்...

வெங்காயம் சமைக்கறதுக்கும் பஞ்சாங்கம் பார்க்கத்தான் செய்கிறோம். :-)

ஆம்..சிரார்த்த சமையலில் மிளகாய், பெருங்காயம், து.பருப்பு போன்றவை இல்லை தான்..

Sustainer said...

பஞ்சகவ்யத்தை தாமிரப்பாத்திரத்தில் மூன்று நாட்கள் வைக்கலாமா?

திவாண்ணா said...

வாங்க செந்தில் நல்வரவு.
பஞ்சகவ்யத்தை தயாரித்த ஓரிரு மணிகளுக்குள் உட்கொள்ளுதலே சிறப்பு. அந்த ந்நெரத்தில் கொஞ்சம் கூட சுவையில் பிரச்சினை தெரியாது. முக்கியமாக அதில் பால் இருப்பதால் தாமிர பாத்திரத்தை வைப்பதே கூட தவறு. குறிப்பாக யாரும் அப்படி சொல்லி இருந்தால் சொல்லுங்கள். விஷய்ம் நன்கு தெரிந்தவர்களை விசாரிக்கிறேன்!