Pages

Monday, June 9, 2008

கர்மகாண்டம்



அனைவருக்கும் வணக்கம்.
திரும்பி வந்தாச்சு!
இப்பதான் புதுவை நண்பர் பேசிட்டு போனை வைத்தார்.
அது எப்படி மழை பெய்யும்ன்னு சொன்னேன்னு அவருக்கு ஆச்சரியம்!

ஆறாம் தேதி வேத பாடசாலை துவக்கம் நல்ல படியா போச்சு. ஆறு குழந்தைகள் சேர்ந்து இருக்கிறாங்க. இப்பதான் அழுகை எல்லாம் நின்னு சரியாகி இருக்கு. எல்லாமே அம்மவை விட்டு விட்டு இருக்கோமேன்னுதான்!
கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம் மேதா தக்ஷிணா மூர்த்தி ஹோமம் எல்லாம் பண்ணோம்.

நேத்து கோடி காயத்திரி ஜபம் செய்த நிறைவா ஆயிரம் ஆவர்த்தி காயத்திரி ஹோமம். ப்ரோக்கிராம் என்னன்னா சங்கிராந்தி ஆரம்பித்து தனி சங்கல்பத்தோட காயத்திரி ஜபம் செய்யணும். தனியா குறிச்சு வைக்கணும். ஆளுக்கு இலட்சம் இலக்கு. ஜப காலம் 4 மாசம். முடிந்த பிறகு ஹோமம்.
பூர்வாங்கம் எல்லாம் முடித்து ஹோமம் ஆரம்பிக்க மணி காலை 9.
ஹோமம் முடிக்கிறப்ப பண்ணிரண்டரை.
பிறகு வைத்து இருந்த காயத்திரி படத்திற்கு பூஜை.
வந்து இருந்த எல்லாருக்கும் சாப்பாடு.
எல்லாம் ஏறக்கட்டி வீட்டுக்கு வர மணி 4.

முன்னிரவில் மேகங்கள் கூடி மழை பெய்ய ஆரம்பித்தது. பலத்த மழை சுமார் அரை மணி.

இந்த ஹோமம் நடக்கிறப்ப பாக்க வந்த நண்பர் கேட்டததைதான் மேலே சொன்னேன். இப்பதான் அவர் திருப்பி போன் பண்ணி கடலூர்ல பெஞ்ச மழை 4 செ.மீ ன்னு வானிலை இலாக்காவை கேட்டு தெரிஞ்சுகிட்டேன்னார்!

நாம் செய்ய வேண்டிய கர்மாக்களை செய்ய நமக்கு பலன் கிடைக்கும். வேற என்ன?
இப்படியாக கர்ம காண்டத்தை இன்னிக்கு துவக்கறோம்.


2 comments:

geethasmbsvm6 said...

வாழ்த்துகள், உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வாழ்த்துகள்.

jeevagv said...

ஆகா, நல்லது, தொடரவும்.