Pages

Thursday, May 22, 2008

வாழ்கை முறை


மொக்கை மொக்கை ன்னு கேள்வி பட்டு இருக்கீங்க இல்லை? என்ன எழுதறதுன்னு தெரியாதப்ப அப்படி ஏதோ ஒண்ணை எழுதிடுவாங்க.
இது அப்படி ஒண்ணு। எழுத நினைச்சது இன்னும் தயாராகலே.
இந்த பதிவுல கூட மொக்கை போட முடியுமான்னு சந்தேகப்படறவங்க என் திறமையை குறைவா மதிப்பு போட்டு இருக்கீங்க।

:-))

இப்ப என்னுடைய -அப்படின்னா நான் கடை பிடிக்கிற தத்துவம் பத்தி சொல்லப்போறேன்। இதுக்கெல்லாம் பேர்ன்னு வைக்கலை. ஆனா சிலர் நாராயணனிஸம் ன்னு பேர் வெச்சிருக்காங்க.

இறந்த காலத்துல வாழ்வதையும் எதிர்காலத்துல வாழ்வதையும் கூடிய வரை தவிர்கிறேன்। அதாவது இறந்த கால நினைவுகள்ள ஏதாவது பாடம் இருந்தா அத எடுத்துகிட்டு மீதியை உதாசீனம் செய்யறேன். மறக்கறேன்னு சொல்லலை. எதையாவது மறக்கனும்னு நினச்சா அது கொஞ்சம் கஷ்டம்தானே. கருங்குரங்கு கதையாயிடும். உதாசீனம் செய்யறது மறந்து போகும்.

எதிர்காலத்தில என்ன செய்யனும்னு கொஞ்சம் திட்டம் போட்டாலும் அதை பத்தி கவலை படுகிறதில்லை। அதாவது ஒரு செஸ் ஆட்டக்காரர் மாதிரி ரொம்ப விரிவா திட்டம் போடறதில்லை. நாளைக்கே நாம் இருப்போமோ இல்லையோ. அதுக்குன்னு திட்டம் போடாம இருக்கிறதும் இல்லை. எதா இருந்தாலும் பகவான் நினைக்கிறபடி நடக்கட்டும்னு விட்டுவேன். நேரம் வரும் போது பகவான் எப்படி நடக்கனுமோ அப்படி நடத்துவான்கிறதுல நல்ல நம்பிக்கை இருக்கு. அப்படி நடக்கிறப்போ நாம நினைக்கிறதை விட நல்லாவே நடக்குது. இது அனுபவம்.

இப்ப இருக்கிற இந்த கணம்தான் நம்மது. அதனாத இந்த கணத்தில எனக்கு வாய்கிற வேலையை செஞ்சுகிட்டு போறேன். அத என்னால முடிஞ்ச அளவு நல்லா செய்யறேன். பிரச்சினையே இல்லாம வேலை நடந்து முடியுதா சந்தோஷம். பிரச்சினை வருதா அதை சரி செய்ய பாக்கிறோம். அது இன்னொரு வேலை. இப்படியே வாழ்கை ஓடுது.

நண்பர் ஒருவர்। நல்லா படிக்கிற மாணவர்தான். மருத்துவ கல்லூரி சேர்ந்தார். படிச்சு தேர்ந்து மேல் படிப்பு சேர்ந்தார். கடைசி பரீட்சைல நேர்முக பரீட்சை. ஒரு எக்ஸாமினர் கேள்வி எல்லாம் கேட்டு சரி போன்னார். அடுத்த எக்ஸாமினர் கேட்டது ஒரே கேள்விதான். நீ இன்ன மாவட்டத்து இன்ன ஜாதிதானே? ஆமாம்னு சொன்னதும் சரி போய் வான்னுட்டார். பரீட்சையில் தேறவில்லை ன்னு சொல்லிட்டாங்க. சரின்னு ஒரு வேலைல சேர்ந்து அப்படியே படிச்சு திருப்பியும் நேர்முக தேர்வு போனார். அதே எக்ஸாமினர். அதே கதை. சரின்னு ஊருக்கு வந்து ப்ராக்டிஸ் ஆரம்பிச்சார். ஆரம்ப காலம் நிறைய நேரம் கிடைச்சது. வாரம் தோறும் நகரத்துக்கு போய் அப்பதான் ஆரம்பிச்சு இருந்த ஒரு உடல் பரிசோதனை செய்யறதை கத்துக்கிட்டார். அடுத்து வந்த பரீட்சையில் வேற எக்ஸாமினர் வர பாஸ் பண்ணிட்டார்.

மேலெழுந்தவாரியா பாத்தா ரொம்பவே அந்நியாயம் நடந்ததுன்னு தோனுது இல்ல? அப்புறம் நடந்தது என்னன்னு பாக்கலாம்।

கொஞ்சம் கொஞ்சமா நோயாளிங்க வர ஆரம்பிச்சாங்க। ஆபரேஷன் செய்யறதுல முதல் பரீட்சையில் தேறாம இருந்தப்ப வேலை செஞ்சரே அந்த ஆஸ்பத்திரி அனுபம் ரொம்பவே கை கொடுத்தது. நல்ல ரிசல்ட் கிடைக்கவே நிறைய பேஷண்ட் வர ஆரம்பிச்சாங்க. அப்புறம் அப்பதான் ஆரம்பிச்சு இருந்த ஒரு உடல் பரிசோதனை செய்யறதை கத்துக்கிட்டார்ன்னு சொன்னேன் இல்லையா அந்த பரிசோதனை இந்த ஊர்ல யாரும் செய்யாம இருந்தப்ப இவர் செய்ய ஆரம்பிச்சதுல நிறைய வேலை வந்தது. இப்படி கொஞ்ச நாள்ளேயே பிஸி மருத்துவர் ஆயிட்டார்.

ஆக நாம் நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்கிறதில்லை। சில சமயம் கெட்டதுன்னு நினைக்கறது கூட நாளான பின்னால நல்லதுன்னு தெரிய வரும். அதனால கடவுள் என்ன கொடுத்தாலும் நல்லதேன்னு எடுத்துக்க ஆரம்பிக்கலாம்.

இதை பிரஸாத புத்திங்கிறாங்க. இது கிடைச்சாச்சுன்னா வாழ்கை ரொம்பவே சுலபமாயிடும்.


6 comments:

jeevagv said...

//இறந்த காலத்துல வாழ்வதையும் எதிர்காலத்துல வாழ்வதையும் கூடிய வரை தவிர்கிறேன்। //
இதைத்தான் ஜென் - அப்படீன்னு சொல்லறாங்க இங்கே!

//இதை பிரஸாத புத்திங்கிறாங்க. இது கிடைச்சாச்சுன்னா வாழ்கை ரொம்பவே சுலபமாயிடும்.//
கர்ம யோகத்துக்கு போறோம் போல!

துளசி கோபால் said...

எல்லாத்தையும் பெருமாள் கையில் ஒப்படைச்சுட்டு இருக்கறதுதான் 'பூரணச் சரணாகதி'.

நானும் ஏறக்கொறைய அப்படித்தான். பெரூ...சாத் திட்டம் எல்லாம் இல்லை.

என்ன ஒன்னு..... நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியுமுன்னு சொல்லிக்கிட்டே.....
'இட்லி'க்கு மாவு அரைச்சு வச்சுக்கரதுதான்:-))))

மெளலி (மதுரையம்பதி) said...

இருப்பதை வச்சு வாழாம, பறக்கறதுக்கு ஆசைப்படறான் அப்படின்னு ஒரு சொலவடை இருக்கே, அது இது தானோ?. :)

திவாண்ணா said...

@ ஜீவா

//இதைத்தான் ஜென் - அப்படீன்னு சொல்லறாங்க இங்கே!//

ஓஹோ1 ஜென் பிலாசபி இன்னும் கொஞ்சம் நான் படிக்கணும்.

// கர்ம யோகத்துக்கு போறோம் போல!//
:-))
அடுத்த வாரம் அனேகமா!

திவாண்ணா said...

@ துளசி அக்கா

இட்டிலிக்கு மாவு அரைக்கிறதுல பிரச்சினை இல்லையே! அது ப்ராக்டிகல். நம் கடமை.
என்ன அந்த மாவு அடுத்தநாள் இட்லி ஆகலாம். இல்லை அப்புறமா தோசை ஆகலாம். இல்லை 2 நாள் கழிச்சு "விட்டேனா பார்" ஆகலாம்! இல்லை வேற ஒத்தர் வயித்துக்கு போயிடலாம். எப்படி ஆனாலும் அதை ஏத்துக்க தெரிஞ்சா ஒரு பிரச்சினையும் இல்லை. இல்லையாக்கா?

திவாண்ணா said...

@ மௌலி
கொஞ்சம்தான் சரி.

இறந்த காலத்தை உதாசீனம் செய்தும் எதிர்காலம்பத்தி anxiety இல்லாமலும் இருப்பதுதான் சொல்ல வந்தது.