Pages

Thursday, March 20, 2008

விஞ்ஞானத்துக்கு எல்லாம் தெரியுமா?


1.

சீரியஸா உள்ளே போகும் முன் ஒரு விஷயத்தை பாத்து விட்டு போனால் கொஞ்சம் நல்லது. நமக்கு புரிதல் கொஞ்சம் சுலபமா இருக்கும்.

விஞ்ஞானத்தின் வரையெல்லை:

சாதாரணமாக ஆன்மீகம் பத்தி பேச்சுவரும்போது சிலர் சொல்லுவது என்ன என்றால் "நான் விஞ்ஞானத்தைதான் நம்புவேன். நீங்க சொல்ற ஆன்மீகத்துக்கு என்ன விஞ்ஞான ஆதாரம் இருக்கு?" என்பதுதான். இதை நாம் கொஞ்சம் யோசனை செய்து பாக்கணும். என்ன யோசனை?

விஞ்ஞானத்துக்கு எல்லாம் தெரியுமா?

சுமார் 105 வருஷம் முன்னால ஆகாய விமானம் கிடையாது. அப்போ மனிதன் பறக்க முடியும்னு சொன்னவங்களை கேலி செஞ்சாங்க. 1903 ல முதல் ஆகாய விமான பறத்தல் நடக்கும்வரை “இது விஞ்ஞான பூர்வமாக முடியாது” அப்படிதானே சொன்னாங்க? இப்ப? ஆகாயம் என்ன, விண் வெளியிலேயே பறக்கிறோம்.
விஞ்ஞானம் ஒரு விஷயம் இருக்குன்னு நிரூபிக்க முடியும். ஒரு கம்பியில் ஒரு கருவியை பொருத்தி இதோ பார் மின்சாரம் பாய்கிறது ன்னு சொல்லலாம்.
ஆனால் விஞ்ஞானம் ஒரு விஷயத்தை இல்லைன்னு நிரூபிக்கவே முடியாது. இது ஒரு சங்கடம். அந்த அந்த காலகட்டத்தில் இருக்கிற கருவிகளை வைத்துதானே பாக்கிறோம்? விஞ்ஞானம் வளர வளர புதிய கருவிகள் வந்து இதுவரை தெரியாததெல்லாம் இப்போ இருப்பதா சொல்லுதுங்க. வரலாற்றை பார்த்தா ஒரு காலகட்டத்தில் இல்லாததா நினைச்சதெல்லாம் பின்னால இருப்பதா நிரூபிச்சு இருக்காங்களே!

இன்றைய விஞ்ஞானத்துக்கு எல்லாம் தெரியும்னா புதிய கண்டுபிடிப்புகளே வரமுடியாது. ஏன்னா நாளை வரக்கூடியது எல்லாம் இல்லைனு இப்பவே தெரியுமே? ஓட்டை வாதம்னு நினைக்கிறீங்களா? தலைய பிச்சுக்க தோணுதா? விஞ்ஞானத்துக்கு இப்பவே எல்லாம் தெரியும்னு நினச்சா இப்படித்தான் தப்பா முடிவு வரும்.

விஞ்ஞானத்துக்கு நிறையவே தெரியலாம். ஆனால் எல்லாம் தெரியமுடியாது. எல்லாம் தெரிஞ்சுக்க வேன்டிய உபகரணங்களோ உணரக்கூடிய சக்தியோ நமக்கு இல்லாம இருக்கலாம். எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வரும் வரை நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது இல்லையா? வரும் காலத்தில என்ன என்ன கண்டுபிடிப்புகள் வந்து நம்மை ஆச்சரியத்துல ஆழ்த்துமோ தெரியாது. அப்போ இப்ப கிடையாதுங்கிற பல விஷயங்கள் இருப்பதா தெரிய வரலாம். ஆக கேள்விக்கு என்ன விடை?

விஞ்ஞானத்துக்கு எல்லாமே தெரியாது என்பதே விடை.

கடவுள் இருக்கிறார் என்பது வெறும் நம்பிக்கைதான் என்கிறார்கள். கடவுள் இல்லை என்பதும் நம்பிக்கைதான். என்ன ஆதாரம் இருக்கு? இப்ப இருக்கிற விஞ்ஞான உபகரணங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால இல்லாமலே போகாது என்பதத்தான் இப்ப தெரிஞ்சு கொண்டோமே. கடவுள் இருப்பதா ஆதாரம் இல்லை; அதனால ஆதாரம் வரும் வரை நான் நம்ப மாட்டேன் என்று சொல்கிறதுல அர்த்தம் இருக்கு. கடவுள் இல்லை, இல்லவே இல்லைன்னு சொல்கிறதுல அர்த்தம் இல்லை.

ஆன்மீகவாதி அனுபவத்தால் கடவுளை பாத்தாலும் பாத்து விடலாம்; உணர்தாலும் உணரலாம். நம்பிக்கை திடப்படும். விஞ்ஞானத்தை மட்டுமே நம்புகிறவர்கள் எப்போதுமே நம்பிக்கையில்தான் இருக்க வேண்டும்.
இரண்டு நாள் கழித்து அடுத்ததை பாப்போம்!
வரட்டா?

3 comments:

Geetha Sambasivam said...

Waiting with Hope.

Endhiran Rajini said...

சூப்பர் ஆரம்பம் !

திவாண்ணா said...

நன்னி எந்திரன்.