Pages

Saturday, August 20, 2022

ஶ்ராத்தம் - 57 - நிறைவு




இந்த ஶ்ராத்தங்களால் யாரெல்லாம் த்ருப்தி அடைகிறார்கள் என்று பார்க்கலாம்.
நமது வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபிகளான தந்தை தாத்தா அவரது அப்பா ஆகியோ த்ருப்தி அடைவது தெளிவு. உபசாரங்களாலும், ஹோமத்தாலும் அன்னத்தை 'ஏஷதே தத' என்று மந்திரங்களால் அர்ப்பணிப்பதாலும் அவர்கள் சந்தோஷிக்கிறார்கள். அதே போல விஶ்வேதேவர்களும் விஷ்ணுவும் நம்மை ஆசீர்வாதம் செய்கிறார்கள்.
ஈஶான விஷ்ணோ என்னும் மந்திரத்தால் அந்த தேவதைகளை த்ருப்தி செய்து பித்ருக்கள் முக்தி அடைய வழி செய்கிறோம்.
விகிரான்ன சமயத்தில்: அஸோமபா மந்திரத்தால்: யக்ஞத்தில் பாகம் இல்லாத சோமயாகம் செய்யாத தேவர்களுக்கு விஸ்வே தேவர்கள் சம்பந்தம் உள்ள உதிரி அன்னம்.
அஸம்ஸ்கிருத: சம்ஸ்காரம் இல்லாமல் பிறந்தவர்களுக்கும் தியாகம் செய்த குலப்பெண்களுக்கும் பித்ரு சம்பந்தமான உதிரி அன்னம்.
வாய்ஸ பிண்டத்தால்: யே அக்னி தக்தா: விதிப்படி அக்னியில் எரிந்தவர் விதிப்படியான அக்னி இன்றி எரிந்தவர், நமது குலத்தில் பிறந்து இறந்தவர் இவர்களுக்கு இந்த பிண்டம்.
பிண்டப்ரதானத்தில் பிண்டம் கொடுப்பதால் பித்ருக்களை அனுசரித்து வரும் பித்ருக்களுக்கும் த்ருப்தி. இது உபஸ்தான மந்திரத்தால் தெரிகிறது. 'யே சத்வாமனு' என்று சொல்லி பிண்ட லேபத்தை கொடுத்து பித்ருக்களை சார்ந்து உள்ளவர்களுக்கு த்ருப்தி.
பிள்ளை இல்லாதவர்கள், அதற்கு விருப்பம் உள்ளவர்களுக்கு பிதாமஹருக்கு வைத்த பிண்டத்தை ‘ஜலம் ஓஷதிகளிவற்றின் ரஸமான இந்த பிண்டத்தை பத்னி சாப்பிடும்படி செய்கிறேன். பிரம்மா கர்ப்பத்தை உண்டாக்கட்டும்’ என்று சொல்லி பத்னிக்கு கொடுக்க வேண்டும். இப்படியும் ஒரு நல்லது நடக்கிறது.
மேல் வஸ்திரத்தை பிழிவதால் ( மந்திரம்: யே கே சாஸ்மத்குலே) தன் குலத்திலோ கோத்ரத்திலோ புத்ரனற்று எவர் இறந்தனரோ அவர்கள் பலனடைகிறார்கள்.
கீழ் வஸ்த்ரத்தை பிழியும்போது (மந்திரம்: உச்சிஷ்ட பாகினோ) ஶ்ராத்தத்தில் உச்சிஷ்டத்தை அடைபவர்களான தாஸர்களும் மந்திரமில்லாமல் எவர் இறந்தவர்களோ அவர்களும் பாபத்தால் மரத்தன்மையை அடைந்தவர்களும் என்னைச்சேர்ந்தவர் எவர் இறந்தனரோ அவர்களும் த்ருப்தி அடையட்டும் என்கிறோம்.
தீர்த்தத்ஶ்ராதத்தால் இன்னும் பலர் த்ருப்தி அடைகிறார்கள்.
ஆகவே இவ்வளவு பேர் த்ருப்தி அடைய, பித்ருக்களின் ஆசிகளைப்பெற ஶ்ரத்தையுடன் நாம் ஶ்ராத்தம் செய்ய இறைவன் துணை நிற்கட்டும்.!
ஶ்ராத்த சமாசாரங்கள் நிறைந்தன.
🙏
 

Wednesday, August 17, 2022

ஶ்ராத்தம் - 56 பிண்ட பித்ரு யக்ஞம் -3




பிண்டத்தின் மீது ஜலாஞ்சலி முன் போல.
மார்ஜயந்தாம் மம பிதர: மார்ஜயந்தாம் மம பிதமஹா: மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹா:
மையிடுதல்: ஆங்க்‌ஷ்வ ததா ஸௌ அமுக ஶர்மன்னு
ஆங்க்‌ஷ்வ பிதாமஹா ஸௌ அமுக ஶர்மன்னு
ஆங்க்‌ஷ்வ ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னு
நல்லெண்ணை தருதல்
அப்யங்க்‌ஷ்வ ததா ஸௌ அமுக ஶர்மன்னு
அப்யங்க்‌ஷ்வ பிதாமஹா ஸௌ அமுக ஶர்மன்னு
அப்யங்க்‌ஷ்வ ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னு
துணியின் நூல் தருதல்:
ஏதானி வ: பிதரோ வாஸாம்ஸி| அதோ நௌன்யத் பிதரோ மா யோஷ்ட
ஏதானி வ: பிதாமஹா வாஸாம்ஸி| அதோ நௌன்யத் பிதாமஹா மா யோஷ்ட
ஏதானி வ: பிரபிதமஹா வாஸாம்ஸி| அதோ நௌன்யத் பிரபிதமஹா மா யோஷ்ட
பின் ஜபம் : நமோ வ: பிதரோ ரஸாய ... பூயாஸம்|
உபஸ்தானம்: க்ருஹான்ன: பிதரோ தத்த ஸதோ வ:பிதரோ தேஷ்ம.
கும்பத்தில் இருந்து நீர் வார்த்தல்: ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் * பித்ரூன்னு
மீண்டும் உபஸ்தானம் :மனோன்வா ஹுவாமஹே * ஸசேமஹி||
பின் நின்று கொண்டு பித்ருக்கள் கிளம்புமாறு ப்ரார்த்தனை - - உத்திஷ்டத பிதர: * பாகதாம் தேவதாஸு
பித்ருக்களை அனுப்பிவைக்க மந்த்ரம் - பரேத: பிதரஸ் * ஸதமாதம் மதந்தி
உபவீதி
ப்ரஜாபதே நத்வ...
கார்ஹ்யபத்யம் /ஔபாஸனாக்னி அருகில் செல்க. அதன் உபஸ்தானம்:
யதந்தரிக்‌ஷம் ப்ருத்வீ * கரோது மாமனேனஸம்|
ப்ராசீனாவீதி
குழந்தை வேண்டி இருந்தால் :
'அபாம் ஸ்தௌஷதீனாகும் * கர்பம் தத்ஸ்வ' என்று சொல்லி மத்திய பிண்டத்தை பத்னிக்கு கொடுத்து உண்ண செய்க.
பத்னிக்கு மந்த்ர ஆவ்ருத்தி:
'ஆதத்த பிதரோ * புருஷோஸத் |
யே ஸஜாதாஸ்ஸமனஸோ * ஶதகும் ஶமாஹா| - இதை சொல்லி யஜமானன் உண்ண வேண்டும். (செய்யாமலும் இருக்கலாம்)
மிகுந்த பிண்டங்களை சேர்த்து எடுக்கவும்.
யே ஸமானாஸ்ஸமனஸ: பிதரோ * தேவேஷு கல்பதாம். என்று சொல்லி தர்ப்பைகளை சேர்த்து அக்னியில் இடுக.

அபூன்னோ தூதோ * புனரப்யேஹி தேவான்
இதைச்சொல்லி ஏகோல்முக அக்னியை தக்‌ஷிணாக்னியில் மீண்டும் சேர்க்க வேண்டும்.
(இதற்கு மேல் ஜீவபிதாக்களுக்கும் உண்டு.)
உபவீதி. பாத்திரங்களை புரோக்‌ஷித்து இரண்டிரண்டாக எடுத்து வைக்கவும்.
முகராத பிண்டங்களை எடுத்து வைக்கவும். இதை ப்ராஹ்மனன் சாப்பிடலாம். ஆனால் சருஸ்தாலீயில் இருப்பது நுகரப்பட்டதால் ப்ராஹ்மணனுக்குக் கொடுக்கலாகாது. கிணறு முதலியவற்றில் தான் சேர்க்கவேண்டும்.
ஏகோல்முக அக்னி நடுவில் அணைந்து இருந்தால்: அஸ்மின் பிண்ட பித்ரு யக்ஞே ஏகோல்முகாக்னி நாஶ ப்ராயச்சித்தார்த்தம் பூர்ணாஹுதி ஹோஷ்யாமி - பூர் புவ.... ப்ரஜாபதய இம்
அஸ்மின் பி.பி யக்ஞே யஜுர் ப்ரேஷ ப்ராயச்சித்தம் ஹோஷ்யாமி - புவ ஸ்வாஹா: வாயவ இதம்.
காயே ந வாசா.. 
 

Tuesday, August 16, 2022

ஶ்ராத்தம் - 55 பிண்ட பித்ரு யக்ஞம் -2




அடுத்து பிண்டப்ரதானம்.

அத்வர்யு - ப்ராசீனாவீதி
ஏகோல்முகம் என்னு அக்னியை தக்‌ஷிணாக்னியில்/ ஔபாஸனத்திலிருந்து ஒரு புகையும் விராட்டித்துண்டத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஏகோல்முகத்திலுள்ள அக்னி மறுபடியும் ஔபாஸனத்திற்கு வந்து சேரும் வரையில் அணையாமல் இருக்கவேண்டும். அணைந்தால் மறுபடியும் இதே மந்த்ரத்தால் எடுத்துவைக்கவும், ப்ராயச்சித்தமும் உண்டு. அதற்கு மந்த்ரம்:
அபயந்த்வசுரா: * ப்ரனுதஸ்வ லோகாத்||
(மந்திரங்களுடன் முழு ப்ரயோகம் தேவையானவர் எனக்குத்தெரிவிக்கவும்.)

வலது கையால் தென்கிழக்காக ஸ்ப்யத்தால் ஒரே ஒரு கோடு கிழித்து நீர் தொட்டு
உதீரதாம் அவ * பிதரே ஹவேஷு என்று நீரால் அவோஷணம் செய்து ஏகோல்முகத்தை தென் நுனியில் வைக்க வேண்டும்.
யஜமானனும் அத்வர்யுவும் ப்ராசீனாவீதியாகி கர்மம் செய்க.
பின் யஜமானன் முன்னேயே வைத்த உத கும்பத்தில் இருந்து மார்ஜனம் செய்யவேண்டும். ஒரு முறை மந்திரத்துடம், இரு முறை மந்திரமில்லாது.
மார்ஜயந்தாம் மம பிதர: மார்ஜயந்தாம் மம பிதமஹா: மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹா:
... மூன்று பரிசேஷணம்.
மூன்று பிண்டங்கள் பிடிக்கவும். ஸ்தாலியில் சிறிது மீதி இருக்க வேண்டும்.
வலது கையால் பிண்டம் அளிக்கவும்.
ஏதத்தே ததஸௌ அமுக ஶர்மன்னு அமுக கோத்ர வஸுரூப .. யே சத்வாமனு
ஏதத்தே பிதாமஹாஸௌ அமுக ஶர்மன்னு அமுக கோத்ர ருத்ரரூப... யே சத்வாமனு
ஏதத்தே ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னு அமுக கோத்ர ஆதித்ய ரூப
யே சத்வாமனு
மந்திரமில்லாமல் நான்காவது வைக்கலாம் வைக்காமலிருக்கலாம்.
(அமுக என்னுமிடத்தில் தம் கர்மாவுக்கானதை இட்டுக்கொள்ளவும்)
.உபஸ்தானம்:
யன்மே மாதா * அபபத்யதாம்|
பித்ருப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
பிதாமஹேப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம: இது உபஸ்தானம்.
அத்ர பிதரோ யதா பாகம் மந்தத்வம்.
இப்படிச் சொல்லி பின் அக்னிக்கு முதுகைக்காட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் உட்காரவும்.
அமீமதந்த பிதரோ ஸௌம்யா: .. என்று மீண்டும் திரும்பிக்கொண்டு அக்னியை பார்க்கவும்.
ஸ்தாலியில் மீதமாக வைத்த சருவை நுகரவும்.அதற்கு மந்திரம்: யே ஸமானாஸ்ஸமனஸ: * வீரம் தத்த பிதர:
பிண்டத்தின் மீது ஜலாஞ்சலி முன் போல.
 

Monday, August 15, 2022

ஶ்ராத்தம் - 54 பிண்ட பித்ரு யக்ஞம் -1





இந்த இழையின் கடைசியில் பிண்ட பித்ரு யக்ஞம். இத்துடன் பதிவுகள் முடியும்.
இதுவும் அமாவாசை தர்ப்பணமும் செய்தால் அந்த மாதன் ஒருவன் செய்ய வேண்டிய ஶ்ராத்த காரியங்கள் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். (வருஷாப்திகம் தவிர). நீளம் கருதி கொஞ்சம் தந்தி பாஷை.
இதை ஆஹிதக்னியோ ஔபாசனம் செய்பவரோ செய்யலாம்.
தந்தை ஜீவித்து இருப்பவருக்கு கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது.
காலம்: பிண்டபித்ருயஜ்ஞ காலம் -
நல்ல பஞ்சாங்கங்களில் பிண்ட பித்ரு யஜ்ஞம் என்று அமாவாஸ்யை அல்லது அதற்கு அடுத்த நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அமாவாஸ்யை இன்றும் இருந்து நாளை காலையிலும் சிறிது இருந்தால் நாளை செய்யவேண்டும். மற்றபடி அமாவாஸ்யை அன்றே செய்யவேண்டும்.
பிற்பகல் வேளையிலோ ஸாயம் ஔபாஸனத்திற்கு முன்பு ஸூர்ய ரச்மிகள் மரங்களின் உச்சிகளைத் தொடும் நேரம் வந்தவுடனோ செய்யவேண்டும்.
ப்ராசீனாவிதியாகி ஸங்கல்பம் செய்யவும் - பிண்டபித்ருʼயஜ்ஞேன யக்ஷ்யே .
வித்யுதஸி இல்லை
ப்ராசீனாவீதியாக அடிப்பகுதியுடன் கூடிய தர்பைகளைக் வெட்டி கொண்டுவரவும் - (அபாம் மேத்யம்) (இது ஜீவபிதாக்களுக்குக் கிடையாது.)
ஔபாஸன அக்னிக்கு/ தக்‌ஷிணாக்னிக்கு அப்ரதக்ஷிணமாக பரிஸ்தரணம் போடவும். கிழக்கிலும் மேற்கிலும் தர்பைகளின் நுனி தெற்கு புறம். வடக்கிலும் தெற்கிலும் கிழக்கு புறம். அக்னிக்குத் தெற்கே சில தர்பைகளைப் போட்டு அவைகளின் மேல் பாத்ரங்களை ஒவ்வொன்றாக வைக்கவும். பாத்ரங்களின் நுனி தென்கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.
பாத்ரங்களாவன - மரக்கரண்டி, ஆஜ்யஸ்தாலீ, சருஸ்தாலீ, அரிசி எடுக்க கிண்ணம், உபஸ்தரணாதிகளுக்கு தர்வீ, மண்பாத்ரம், ஒரு தொன்னை.
உபவீதி
மண் பாத்திரத்தில் தர்ப்பை ஒன்று வைத்து அரிசி இடவும். - பித்ருப்யோ வோ ஜுஷ்டம் நிர்வபாமி.
இதை சரு ஸ்தாலியில் சேர்க்கவும்.
ப்ராசீனாவீதியாக அக்னியில் அரைவேக்காடு சருவாக்கி இறக்கவும்.
‘அபஹதா அஸுரா ரஷாகும்ஸி பிஶாசா வேதிஷத:’ ஸ்ப்யத்தால் தென் கிழக்காக கோடு போட்டு அப உப...
ஶுந்ததாம் பிதர என்று நீரால் அவோக்‌ஷணம்.
ஆயந்து பிதரோ மனோ ஈஜவஸ: என்று அபிமந்த்ரணம்.
ஸக்ருதாச்சின்னம்* சானுகைஸ்ஸஹ தென்கிழக்காக தர்பைகளை வேதியில் பரப்புக.
ப்ரதான ஹோமம்:
சருவில் அபிகாரம். பின் வேதியில் இறக்கி வைக்கவும். சரு ஸ்தாலீ, மேக்‌ஷணம் சாதனம்.
உபச்சாரத்திற்காக வேதிக்கு தெற்கே படுக்கை, தலையணை, கண்மை, எண்ணை, ஜலகும்பம் ஆகியன வைக்கவும்.
உபவீதியாகி வலது காலை ஊன்றி குத்திட்டு அமர்ந்து ...
மேக்‌ஷணத்தில் உபஸ்தீர்ய. சரு எடுத்து மேலே அபிகாரம் பாதி மட்டும் ஹோமம். மீதியை தொன்னை/ மண் பாத்திரத்தில் சேமிக்கவும்.
ஹோமம் ஸோமாய பித்ருபீதாய ஸ்வதா நமஹ. இதம்
அதே போல் - யமாயாங்கிரஸ்வதே பித்ருமதே ஸ்வதா நமஹ. இதம்.
உபஸ்தரணம் அபிகாரம் இல்லாமல் இந்த சேமித்த மீதியை எடுத்து ஹோமம்: அக்னயேகவ்யவாஹனாய ஸ்வதா நமஹ. இதம்.
மந்திரமில்லாமல் மேக்‌ஷனத்தையும் அக்னியில் இடுக.
(இதுவரையில் தான் ஜீவபிதாக்களுக்கு முக்கிய ப்ரயோகம். இதன்பிறகு ப்ராயச்சித்தாதிகள் மட்டும் உண்டு. அவைகளுக்குக் கடைசியில் பார்க்கவும்.)
அடுத்து பிண்டப்ரதானம்.
 

Sunday, August 14, 2022

ஶ்ராத்தம் - 53




 


முன் பதிவுகளில் ஒரு விஷயம் விட்டுப்போயிற்று. (இதை பின்னால் மின் நூலாக்கும்போது சரியான இடத்தில் சேர்த்து விடுகிறேன்.)

இந்த ஶ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். இது எல்லா ஸ்நானங்களுக்கு பின் செய்யக்கூடியது. பூணூலை இடம் செய்து கொண்டு… 
 
மேல் வஸ்திரத்தை பிழிய மந்திரம்: யே கே சாஸ்மத்குலே ஜாதா அபுத்ரா கோத்ரஜா ம்ருதா: தே க்ரஹ்ணந்து மயா தத்தம் வஸ்த்ரம் நிஷ்பீடனோதகம். பொருள்: என் குலத்திலோ கோத்ரத்திலோ புத்ரனற்று எவர் இறந்தனரோ அவர்கள் என்னால் கொடுக்கப்பட்ட வஸ்திரத்தை பிழிந்த ஜலத்தை க்ரஹித்துக் கொள்ள வேண்டும்.

கீழ் வஸ்த்ரத்தை பிழிய மந்திரம்:உச்சிஷ்ட பாகினோ தாஸா யே ம்ருதாஸ்தேத்வமந்த்ரகா: துப்யந்து தருதாம் ப்ராப்தா மம ஸம்பந்தினோ ம்ருதா: - பொருள்: ஶ்ராத்தத்தில் உச்சிஷ்டத்தை அடைபவர்களான தாஸர்களும் மந்திரமில்லாமல் எவர் இறந்தவர்களோ அவர்களும் பாபத்தால் மரத்தன்மையை அடைந்தவர்களும் என்னைச்சேர்ந்தவர் எவர் இறந்தனரோ அவர்களும் த்ருப்தி அடையட்டும்.

பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும்.